இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?

            ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதிலிருந்து இதுவரை நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருப்பது,கற்றுக் கொண்டிருப்பது மெக்காலே பிரபு என்ற ஆங்கில அதிகாரி கற்றுக் கொடுத்த கல்வி முறைதான்.ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அவர்களுக்கு கீல் வேலை பார்க்க ,அவர்கள் சொல்வதைக்  கேட்க எப்படியான கல்வி முறையை இந்தியர்களுக்கு வழங்கலாம்? என்று நினைத்ததன் விளைவு தான் நாம் கற்றுக் கொண்டிருக்கும் இந்த கல்வி முறை.                                                                                                                 இந்தக் கல்வி முறையினால் நமக்கு சுய சிந்தனை வளர்க்கப்பட்டதா?அரிய பொருள்களை கண்டுபிடிக்கும் ஆற்றலை இக்கல்வி முறை நமக்கு வழங்கியதா? இல்லை நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? இதற்கு எல்லாம் காரணம் என்ன? என்று சிந்திக்கும் ஆற்றலையாவது இந்த கல்வி முறை நமக்கு வழங்கியதா?அன்று அவர்கள் சொல்வதை கேட்டு இங்கு மண்டையாட்டினோம்,இன்று அவர்களுக்கு கீல் வேலை செய்ய அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறோம்.இங்கிருந்தபடியே  BPO வேலை மூலம் அவர்களுக்கு சேவை செய்து வருகிறோம்.                                                                             இந்திய அரசுக்கும், அரசியல்வாதிக்கும் மக்கள் நன்றாக கல்வி பயில வேண்டும்.சுய சிந்தனையுள்ள மனிதனாக வளர்க்கப்பட வேண்டும் என்று விரும்பியதை இல்லை.தனது குடிமகன் சிந்தனை செய்யகூடாது,சிந்தனை செய்தால் நாம் செய்யும் அக்கிரமங்களை கண்டுபிடித்து,நமக்கு வாக்களிக்கமாட்டார்கள்,இவன் அரை குறை அறிவோடு அரைவேக்காட்டுத்தனமாக கல்வி பயில வேண்டும்.பின் தன் அரசாங்கத்துக்குப்          பொருள் உதவி செய்யும் பெரிய முதலாளிகளின் ஆலைகளில்,தொழிலில் அவர்கள் பணிபுரிய வேண்டும் .என்பதையே நோக்கமாக வைத்தே இந்திய குடிமகன்களுக்கு கல்வி வழங்க்பப்படுகிறது.                                                                         இந்நிலையில் நாம் எப்படியான வாழ்கை வாழ்வது நமது தலைமுறைக்கு என்னவிதமான கல்வியை வழங்குவது? என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.நாம் மட்டும் தான் சிந்திக்க முடியும்.சிந்திப்போமா?                                                                        நண்பர்களே பதிவை படித்து ஏதாவது சொல்லுங்கள்.கருத்து சொல்வதுதான் அழகு.அதை செய்யுங்கள்.நன்றி.                                                                   

2 கருத்துகள்:

மைதீன் சொன்னது…

சிந்தனையின் வெளிப்பாடுதானே இந்த பதிவு

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
இனி தினமும் வருவேன்.
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....