இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

சனி, 12 பிப்ரவரி, 2011

மக்கள் அதிகாரத்திற்கு பணியலாமா?

                                 மனிதன் தான் வாழும் வாழ்கையில்.தன் வாழ்கையை பாதுக்காக ஏகப்பட்ட எதிர்நீச்சல் போட வேண்டியுள்ளது.நாம் வாழும் வாழ்கையில் நாம் குண்டர்கள் அதிகாரம்,காவல் துறை அதிகாரம்,அரசு அதிகாரம்,மேல் சாதி மக்களின் சாதிவெறி அதிகாரம், இன்னும் பெயரிடப்படாத பல அதிகாரங்களை கடந்து வர வேண்டியுள்ளது.இப்பொழுது நம்முள் எழும் கேள்வி நாம் அதிகாரத்திற்கு பணியலாமா?                                                 அதிகாரம் என்பது என்ன?அதிகாரம் எபபடி தோன்றுகிறது?  தான் நினைப்பது நல்லதோ,கெட்டதோ நாம் நினைத்தபடி நடக்க வேண்டும்.இப்பூமியானது பல உயிர்கள்,தாவரங்கள்,விலங்குகள் வாழ்வதற்கு உரியது என்று நினைக்காமல்,அப்படி வாழ்வதுதான் அழகு என்று நினைக்காமல் ,தான் மட்டுமே வாழ வேண்டும்,தான் அதிகாரம் செலுத்துவது போல் தனது சந்ததியினரும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று நினைப்பது,இங்குள்ள இயற்கை செல்வங்களை தான் கொள்ளை அடித்து அனுபவிப்பது போல்,பன்னாட்டு கம்பனிகளும் சுரண்டுவதற்கு  அனுமதிப்பது,பொதுவாக தான் வாழ்வதற்காக இங்குள்ள இயற்கை செல்வங்களை எல்லாம் அழிப்பவரை கண்டும் காணாமல் இருப்பது என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைப்பதால் தான் பல பிரச்சனைகள் எழ காரணமாகிறது.                                                                                                                                         காடுகளில் இயற்கையாக வாழும் மலை வாழ் மக்களை விரட்டி விட்டு.அவர்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டு அவ்விடங்களில் உள்ள தாதுப்பொருள்களை கொள்ளை அடிப்பதற்கு பன்னாட்டு கம்பனிகள் போடும் சதி திட்டத்திற்கு ஆதரவளிப்பது,என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்தால் மக்கள் அதைக்கண்டு எதிர்க்காமல் என்ன செய்வார்கள்?இவர்கள் தங்கள் லாப வெறிக்காக கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமி பாது காத்து வந்த இயற்க்கை செல்வங்களை அழித்து இயற்கையை சேதப்படுத்தினால் யாருக்கு நஷ்டம்?இயற்கையை மாற்றினால் என்ன விபரிதம் ஏற்படும் என்பது நமது வாழ் நாளில் நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்இதை இந்த மூடர்கல் உணர்வார்களா?இவர்கள் தங்கள் காரியத்தை சாதிப்பதற்கு எத்தனை விதமான அதிகாரத்தை பயன்படுத்தினாலும் மக்கள் பணியாமல் எதிர்த்து தான் நிற்ப்பார்கள் உங்கள் அறிவீலிதனத்திற்கு அவர்கள் ஆதரவு தரவே மாட்டார்கள்.                                                                                                                                                                  நண்பர்களே பதிவை படித்து கருத்தை தருக .                        

கருத்துகள் இல்லை: