இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

திங்கள், 28 மார்ச், 2011

அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?

சண்டே.அப்பா ஓய்வு நாள்.தொலைகாட்சியில்  டிஸ்கவரி சானலில் ஏதாவது அறிவியல் நிகழ்ச்சியை பார்ப்போம்,பரபரப்பான தேர்தல் செய்தியை பார்ப்போம் என்ற ஆவலில் ரிமோட்டை மாற்றினால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முதலில் ராஜ் தொலைக்காட்சியில் எதோ சினிமா கலாட்டாவாம்.இரு நடிகர் நடிகைகளின் உருவத்தை ஓட்டி வைத்துக்கொண்டுகீழே அலைபேசி எண்ணை தொடர்ப்பு  கொள்ள வேண்டுமாம்.சரியாக சொன்னால் 50 ஆயிராமாம்.தொடர்ப்பு கொள்வதற்கு நிமிடத்திற்கு 10 ரூபாயாம்.அவ்வுருவத்தை பிறந்த குழந்தை பார்த்தால் கூட சொல்லிவிடும்.ஆனால் தொடர்ப்பு கொண்ட யாரும் சரியாக சொல்லவில்லை.இப்படியும் ஒரு ஏமாற்று.
அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ராசிக்கல்,அதிர்ஷ்ட பெயர்,மற்றொரு சேனலில் தாயத்து,அம்மன் எந்திரம்,அடுத்த சேனலில் ஜோசியம்,உங்கள் ராசிக்கு என்ன பலன்?மற்றொன்றில் ஆண்மைக்குறைவா எங்களிடம் வாருங்கள் லேகியம் தருகிறோம்.இதுபோக நிசம் நிகழ்ச்சி என்ற பெயரில் பில்லி,சூனியம்,ஆவி,பேய் மாந்திரிகம்.அப்பப்பா போதுமடா சாமி,இவர்களும் இவர்கள் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்.அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?
ஐயா,தொலைகாட்சி அதிபர்களே,நிர்வாகிகளே உங்களுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை என்றால் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துங்கள்.தமிழர்களை எவ்வளவு கிறுக்கனாக ஆக்க முடியுமோ,எவ்வளவு மூடநம்பிக்கைவாதியாக மாற்ற முடியுமோ,அப்பாவி மக்களை எவ்வளவு பயம் காட்டிஉங்கள் ரேட்டிங்கை உயர்த்த முடியுமோ அனைத்தையும் செய்து விட்டு நீங்கள் தொலைகாட்சி நடத்துவதை விட கௌரவமான தொழில் நிறையவே உள்ளது.அதைச் செய்யலாம்.செய்வீர்களா?
நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும் .நன்றி .                        

சனி, 26 மார்ச், 2011

கல்வி மன்னர்களா?கந்துவட்டி மன்னர்களா?

             ஒரு மனிதன் தான் வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வலிகள் உள்ளன.பள்ளியில்,கல்லூரியில் நன்கு படித்த மாணவன் பிற்காலத்தில் ஒரு அரசு அலுவலகத்திலோ,இல்லை தனியார் அலுவலகத்திலோ பணிபுரிந்து காலத்தை ஓட்டலாம்.இன்னும் சற்று புத்திசாலிகள் சுயமாக தொழில் செய்து பொருளாதாரரீதியில் உயர்ந்த நிலையடைந்து சுகமாக வாழலாம்.இன்னும் சில விந்தையான மனிதர்கள் இருக்கிறார்கள்.இவர்கள்,தான் பொருளாதார நிலையில் மிக உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும்.ஆனால் சமூகம் மதிக்கும் ஏதாவதுதுறையில் இருக்க வேண்டும்.அதற்காக இவர்கள் போடாத வேசமில்லை.கல்விமன்னர்கள் எனச் சொல்லிகொல்வார்கள்.சமுகத்தை நாங்கள்தான் தூக்கி நிறுத்துவோம் என போலி வேசமிட்டு சமுகத்தை சுரண்டுவார்கள்.
                                 இன்று சமுகத்தில் பெரிய மனிதர்கள் என்று சொல்லி கொள்பவர்களை நன்கு கவனித்து பாருங்கள்.அவர்கள் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியோ,பொறிஇயல் கல்லூரியோ,ஒன்றுமில்லை என்றால் ஒரு மழலையர் தொடக்க பள்ளியோ இல்லாமல் இருக்க மாட்டார்கள்.தாங்கள் பிறந்ததே இந்த உலகிற்கு சேவை செய்வதற்கு மட்டும் தான் என்ற ரீதியில் பேசுவார்கள்.
                        ஐயா,உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்.நீங்கள் தொடக்கபள்ளி ஆரம்பித்து,மெட்ரிகுலேசன் பள்ளியாக மாற்றி,மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி எவ்வளவு பணம் மக்களிடம் கறக்க முடியுமோ அவ்வளவு பணத்தை கரக்கிறிர்கள்.கந்து வட்டி கும்பலை விட மோசமாக பணத்தை பிடுங்கிரிர்கள்.கல்வியை கடை சரக்காக மாற்றி விட்டிர்கள்.
                இன்று அரசும் உங்களுக்கு சாதமாகத்தான் இருக்கிறது.எதோ,கிராமப்புற மாணவர்கள்,நகர்புற மாணவர்களுடன் போட்டிட முடியாமல் திணறுவார்கள் என்ற காரணத்தால் இன்று பொறிஇயல்,மருத்த்வதுறைக்குநுழைவுத் தேர்வையே ரத்து செய்து விட்டார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் கிராமப்புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.அரசியல்வாதிகளும்,அவர்கள் பினாமிகளும் நிறைய பொறிஇயல் கல்லுரி கட்டி விட்டார்கள்.படிக்க ஆள் இல்லை.அதற்கு தடையாக நுழைவுத் தேர்வு உள்ளது.உடனே ''நுழைவு தேர்வை நிறுத்து,கிராமப்புற மாணவர்களின் நிலையை உயர்த்து ''என கோஷமிட்டு சாதித்து விட்டிர்கள்.
                             ஐயா,சமுக சேவர்கலே நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.வட்டித்தொழில் செய்யலாம்,சீட்டாட்டம் நடத்தலாம்,குதிரை ரேசில் பங்கு கொள்ளலாம்,டாஸ்மாக் பாரை நடத்தலாம்,பங்கு மார்க்கட்டில் ஈடுபடலாம்,கிரிக்கெட் சூதாட்டத்தில் கலக்கலாம்,பல அமைட்ச்ர்களுக்கு பினாமியாக இருக்கலாம் இப்படி பலதுறை இருக்கும்பொழுது நீங்கள் ஏன் கல்வித்துறைக்கு வர வேண்டும் கல்வித்துறை என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு உரியது.அதுதான் உங்களிடம் இல்லையே.''உங்கள் வழிதனி வழியாக இருக்கும்பொழுது உங்களுக்கு ஏன்?இந்த கல்வி வழி''.இந்த வேஷத்தை கலைத்து விட்டு நீங்கள் உடுத்தும் வெள்ளை ஆடைப்போல் தூய்மையாக இருப்பிர்களா?
                           நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை தரவும்.நன்றி.    
         

வியாழன், 24 மார்ச், 2011

அரசியல்வாதிகளின் ''சினிமா மோகம்'' அழியுமா?

                        ஒரு அரசியல்வாதி தான் செய்த சாதனைகள்,தான் செய்ய போகும் திட்டங்கள் முதலியவற்றை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது தான் ஒரு பழுத்த,வயது முதிர்ந்த,அனுபவத்தில் கொட்டைபோட்ட அரசியல்வாதிகளின் நியாயமான தன்மை.மக்களின் மதியை மயக்காமல்,இலவசங்களை வாரி வழங்காமல் எங்களுக்கு நீங்கள் வாக்களித்தால்,உங்கள் வாழ்வு நல்வழி பெற எங்களால் முயன்றதை செய்வோம் என்று சொல்வதுதான் ஒரு தரமுள்ள அரசியல்வாதியின் செயல்.                                                                                                                                                                           ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கூத்து  என்ன?  மேடையில் முதல்வர் உட்பட பல கட்சி அரசியல் தலைவர்கள் அமர்ந்திருக்க,அதற்க்கு சம்பந்தமே இல்லாத காமடி நடிகர் வடிவேலுவை பேச வைத்து வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ஏன்?அரசியலுக்கு வர வேண்டும்.இவர்கள் தங்களை நம்பவில்லை,தாங்கள் செய்த சாதனைகளை நம்பவில்லை.மாறாக சினிமா மோகத்தையே நம்புகிறார்கள் அந்த மகராஜன் வடிவேலுவோ,எதிர் கட்சி தலைவரை வாடா,போடா,குடிகாரப்பயல்,24 -மணிநேரமும் ரவுண்டுகட்டி தண்ணி அடிப்பவன் என்ற சபை நாகரிகம் கூட தெரியாமல்  பேசுவதை முதல்வரும் சிரித்து வரவேற்கிறார் என்றால் நீங்கள் என்னவிதமான அரசியலை கொண்டு வர முயர்ச்சிக்கிரிர்கள்?நீங்கள் நடத்திக்கொண்டிருப்பது தானே ''டாஸ்மாக்''.அதைத்தானே நாங்கள் குடிக்கிறோம்.அது தப்பு என்றால் அதை ஏன்?நடத்தி கொண்டிருக்கிறிர்கள்?மக்கள் சினிமா மோகத்தில் மிதக்கிறார்கள் என்று நீங்களாக நினைத்துக் கொண்டு உங்கள் மகனில் இருந்து,பேரன் வரை சினிமாவில் நடிக்க ஊக்கப்படுத்திருகிர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகத்திலிருந்து மீண்டு வருகிறார்கள்?என்ற கதை உங்களுக்கு தெரியமா?                                                                                                                                   எதிர் கட்சித் தலைவர் அம்மா இருக்கிறார்.தன் கூட்டனிக்கு நடிகர் பட்டாளமே வந்து விட்டது.இனி நாம் தான் முதல்வர் என்ற குருட்டு நம்பிக்கையில்,அவருடன் பல வருடங்களாக கூட்டணி வைத்த நல்ல பேச்சாளர்கலை வைத்துள்ள வை.கோ.கூட்டணியை நிராகரிக்கிறார்.வை.கோவை நீங்கள் ஏன்?நிராகரிக்கிரிர்கள்?[எந்த கம்பெனி முதளாலிடம் பணம் வாங்கினீர்கள் .இது தனிக் கதை ]நீங்கள் சினிமாவில் இருந்து வந்து சாதித்ததை போல்,இப்போது விஜயகாந்த்,சரத்குமார்,விஜய் முதலியவர்களை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று கணக்கு போடுகிறிர்கள்?போடுங்கள்,போடுங்கள்.                                                                                                                    ஐயா,அரசியல்வாதிகளே நீங்கள் செய்த சாதனைகள்,உங்கள் சுயநலமில்லா போக்கு,உங்கள் குடும்பங்கள் வாழ்வதற்காக தமிழ்நாட்டை சுரண்டாமல் இருக்கும் தன்மை,பத்திரிக்கைக்கு நீங்கள் கொடுக்கம் சுதந்திரம்,நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க அதை விட்டு விட்டு சினிமா நடிகர்களின் பாராட்டு விழாவில் போய் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது,தனது குடும்ப உறுப்பினரை வைத்து ஊழல் செய்தால் மாட்டி விடுவோம் எனத் தெரிந்து அப்பாவி மனிதர்களை வைத்து ஊழல் செய்வது,இலவசங்களை கொடுத்து தமிழர்களை பிச்சைக்காரனாக ஆக்கும் தன்மை,இதை வைத்துதான் உங்களுக்கு வாக்களிப்பார்களே ஒழிய உங்களின் சினிமா மோகத்தை வைத்தல்ல.இதை நீங்கள் உணர்வீர்களா?                                                                   நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி .      

செவ்வாய், 22 மார்ச், 2011

மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா?

                                                   வளமான நாடு முன்றாம் நாட்டை ஆதிக்கம் செய்கிறது.ஒரு இனம் மற்ற இனத்தை ஆதிக்கம் செய்கிறது.மேல் சாதி கீழ்  சாதியை ஆதிக்கம் செய்கிறது.ஒரு மொழிக்காரன் பிறிதொரு மொழிக்காரனை ஆதிக்கம் செய்கிறான்.மனிதர்கள் ஆதிக்கம் செய்யாமல் வாழவே மாட்டார்களா?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  ஒரு அலுவலகத்திலோ,வியாபார நிறுவனத்திலோ மேல் நிலை வேலைக்கு எல்லாம் மலையாளிகளே கொடி கட்டி பறக்கிறார்கள்.தமிழன் எல்லாம் கீழ் நிலை வேலையே செய்து கொண்டிருக்கிறான்.இது நடப்பது சிங்கார சென்னையில் தான்.தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மலையாளிகள் தமிழர்களை ஆதிக்கம் செய்கிறார்கள்.சென்னையில் மட்டுமல்ல வளைகுடா நாடுகளிலும் மலையாளிகளின் ஆதிக்கமே கொடிக்கட்டி பறக்கிறது.திறமை இருக்கோ/இல்லையோ அவர்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் இளிச்சவாயன் தமிழர்கள் தனக்குள் சண்டை இட்டுக் கொண்டு பிரிந்து கீழ் மட்ட அடிமை வேலையே செய்கிறார்கள்.                                                                                                                                                                                                    தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் அரிசி,காய்கறிகள்,கோழி,முட்டை போன்ற உணவுப் பொருள்கள்,தமிழ்நாட்டில் தயாராகும் மின்சாரம் போன்றவை அவர்களுக்கு வேண்டும்.ஆனால் அவ்வுணவுப்பொருள்களை உற்பத்திப்பண்ணும் தண்ணீரை அவர்கள் தமிழ் நாட்டிற்கு தர மாட்டார்களாம்.இது என்னங்க நியாயம்?இதை சொன்னது நானில்லை.அவர்கள் நாட்டு கேரள எழுத்தாளர் பால் சக்கரியா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.அதைப் புரியாத நம்மூர் தமிழ் எழுத்தாளர் சாருநிவேதிதா ''என்னை மலையாளிகள் கொண்டாடுகிறார்கள்''என்கிறார்.உங்களை ஏன்? கொண்டாடுகிறார்கள்,நீங்கள் தமிழரின் பலம்,பலஹினம் முதலியவற்றை எழுதிக் கிழிக்கிருரிர்கள்.அதை அவர்கள் நன்கு வாசித்து.தமிழர்களை எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டுமோ அப்படி ஆதிக்கம் செலுத்திகிரார்கள்.                                                                                                                                இன்னொரு கேரளத்து சிங்கம் இருக்கிறார்.அவர்தான் நடிகர் ஜெயராம்.அவர் சென்னையிலே இருந்து கொண்டு சினிமாவில் நன்கு சம்பாதித்துக் கொண்டு,அவர் வீட்டில் சமையல் செய்யும் தமிழ் பெண்ணை ''கறுத்த தடித்த தமிழச்சி ''என்று கொச்சை மொழி பேசி கேலி செய்யும் அவலத்தை என்னவென்று சொல்வது?                                                                                                                                                      ஐயா மலையாளிகளே உங்கள் மொழி பாசம்,ஊர் பாசம் உங்களிடமே இருக்கட்டும்.பிழைக்க வந்த இடத்தில் உங்கள் நிலை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.இல்லையென்றால் காலம் உங்களை அப்புறப்படுத்தும்.                                                          நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி.             

திங்கள், 21 மார்ச், 2011

மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?

                இந்த உலகில் மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்?ஏன் வாழ்கிறார்கள்? மனித வாழ்கைக்கு தான் அர்த்தம் என்ன?மனிதன் தான் வாழ்வதால் என்ன?சேதியை இந்த உலகிற்கு தெரிவிக்கிறான்?                                                                                                                 ஒரு அதிகாரி தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால்,அந்த அதிகாரம் என்பது சமூகத்தை நல்வழியில் நடத்தத்தான் என்பதை உணர்ந்து அதன்படி செயல் படுகிறார்களா?அதிகாரம் தனக்கு கிடைத்து விட்டால் ''தான் ''என்ற அகங்காரம் கொண்டுஅந்த அதி   காரத்தை எந்த அளவுக்கு கீழான செயல்களுக்கு பயன்படுத்த முடியுமோ? அந்த அளவுக்கு பயன் படுத்தி சமூகத்தை தவறான பாதைக்கு வலி நடத்திச் செல்லும் கொடுமையை என்னவென்று சொல்வது?''காவல் துறையின் ஈரல் கேட்டு விட்டது ''என்று தமிழக முதல்வர் சொல்லும் அளவுக்கு அவர்களின் செயல் உள்ளது.அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால் சமூகத்தில் எத்தனை விதமான மனிதர்கள் பாதிக்கப்பட்டு அவர்களும் சமூகத்தை தண்டிக்கும் அளவுக்கு மாறி விடுகிறார்கள்.                                                                                                                       காவல் துறை மட்டுமல்ல உலக அரசியல் வாதியிலிருந்து உள்ளூர் ரௌடிகள் வரை தான் இருக்கும் நிலை மறந்து,தன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் போலி வேசமிட்டு,போலி அதிகாரத்தை வைத்துக் கொண்டு சமூகத்தை பால் படுத்தி வருகிறார்கள்.அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ரௌடிகள் மட்டுமல்ல நமது உலக நாட்டு அதிபர்களும்,பிரதமர்களும்,முதல்வருகளும் தலைவர்களும் தமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு தங்கள் கடைமையை சரி வர செய்யாமல் போனதால்தான் இன்று மக்கள் புரட்சி செய்து அவர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குடும்ப அமைப்பிலும் ''தான்'' தான் எல்லாம் என்ற அகங்காரம் தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன.                                                                                                                                                                       இப்படி ஒவ்வரு சூழ்நிலைக்கேற்ப மனிதன் தான் மேற்கொள்ளும் கடைமையை சரிவர செய்ய தடையாக இருக்கும் மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?                                                                                                                                       நண்பர்களை பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தைச் சொல்லவும்.நன்றி .

திங்கள், 14 மார்ச், 2011

அமெரிக்க அரசு சிந்திக்குமா?

                                அன்பு என்பது என்ன ?சக மனிதர்களின் மீது,சக உயிர்களின் மீது செலுத்தப்படுவது.இவ்வாறு செலுத்தப்படும் அன்பை சக நாட்டின் மீது செலுத்த முடியாதா? சக நாட்டின் மீது அன்பை செலுத்தி அவர்களும் மனிதர்கள் தான் அவர்களும் இந்த பூமியில் வாழ உரிமை உள்ளது என்று நினைப்பதுதான் அறிவுடைய எத்தகைய மனிதர்களின் நிலையும். ஆனால் இந்த உலகை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா அத்தகைய நிலைப்பாட்டை கை கொண்டுள்ளதா?                                                                                                                                                               ஐயா,அமெரிக்க அரசாங்கமே நீங்கள் ஆதிக்கம் செலுத்தாத நாடு இப்பூமியில் எங்காவது உள்ளதா?நீங்கள் சுகமாக வாழவும்,உங்கள் தேவைக்கு எங்காவது,எந்த வழியிலாவது முட்டுக் கட்டை வந்தால்,அந்த இடத்தை உண்டு,இல்லை என நிர்முலமாக்கி அழித்தால் தான் உங்களுக்கு தூக்கமே வருகிறது. ஏன்இந்த கொலை வெறி?நீங்கள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறிர்கள்.உங்கள் நாட்டு குடி மகன் எப்படி மனிதர்களோ!அதைப்போலத்தான் சக நாட்டு மனிதர்களும்.ஒரு சாரர் மட்டும் நன்கு செழித்து வளர வேண்டும்,மற்றவர் எப்படி போனால் என்ன?என்ற உங்கள் மனப்போக்கை என்னவென்று சொல்வது?நீங்கள் ஆதிக்கம் செலுத்தி வளமாக வாழ்வதால்,உங்கள் மனப்போக்கையே இந்த உலகில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தனது மனப்போக்காக எடுத்துக் கொண்டுள்ளது.                                                                                                                                                                              நீங்கள் எப்படி சக நாட்டை அழிப்பதற்கு என்னவிதமான தந்திரங்களை கை கொள்கிரிர்களோ,அதே முறையை வைத்தே ஒவ்வரு நாட்டு மனிதர்களும் தனது குடும்பங்களை,தனது சொந்த பந்தங்களை,தனது நாட்டிளிலுள்ள பிற குடிமகன்களின் சொத்தையோ,அவனது வாரிசையோ அழிப்பதற்கு உங்களது அளவுகோலையேஉதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த உலகில் நீதி,நேர்மை,உண்மை போன்ற நல்நெறி கொள்கைகள் உண்டா?இதை கடைபிடிப்பவர் நன்றாக வாழ முடியும் என்றுதான் உங்கள் நாட்டு பெரியவர்கள் முதல் உலக நாட்டு பெரியவர்கள் வரை கற்ப்பித்து கொடுத்து சென்றுள்ளார்கள்.ஆனால் இந்த நன்னெறி கொள்கையை நீங்கள் கடைப் பிடிக்கிரிர்களா?என்பது உங்கள் மனசாட்சிக்குத்தான் வெளிச்சம்.நீங்கள் எடுக்கும் ஒவ்வரு தவறான முடிவும்,வருங்காலசந்ததினருக்கு தவறான வழிகாட்டுதலாக ஆகி விட வாய்ப்பு உள்ளது.உலகை தவறான போக்கில் வழி நடத்தி செல்கிரிர்கள்.                                                                  இதை அனைத்தும் தெரிந்தும்,நாங்கள் இந்த நன்நெறி கொள்கைக்கு எதிராகத்தான் செல்வோம் என்று நீங்கள் முடிவேடுத்தால்,காலம் உங்களை சீராட்டி மகிழும் என்று நினைக்காதிர்கள்.இந்த பூமிப் பந்தில் உங்கள் தேசமே இல்லாமல் போய் விடும்.இதற்க்கு யாருடைய ஒத்துழைப்பும் தேவை இல்லை,இயற்கை ஒன்றே போதும்.                                                                                                                                                                                                 நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை தெரிவிக்கவும்.நன்றி.                                                        

சனி, 12 மார்ச், 2011

இயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன?

                   காலையில் எழுகிறோம்,அலுவலகங்களுக்கோ,வியாபார நிறுவனங்களுக்கோ,வேறு எங்காவது பணி புரியவோ செல்கிறோம்.மாலை வருகிறது வீடு திரும்பிகிறோம்,உணவருந்திகிறோம்,தூங்குகிறோம்.இதுதான் நமது அன்றாட வாழ்கைமுறை.இதை மீறி,இந்த உலகம் என்பது என்ன?இந்த உலகம் ஏன்?நம்மை தண்டிக்கிறது  என்றுஎன்றாவது யோசித்து இருக்கிறோமா?                                                                                                                                                                பூமிக்கு அருகில் சந்திரன் நெருங்கி வரும் பொழுது எல்லாம் ஏதாவது இயற்கை அழிவை பூமிக்கு அன்பளிப்பாக சந்திரன் வழங்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.வரும் மார்ச் மாதம் 19 -தேதி பூமிக்கு  அருகில் சந்திரன் வருகிறது.இதன் முன்னேர்ப்பாடே இந்த ஜப்பானிய சுனாமி.இதற்கு முன்பும் பூமியை சந்திரன் நெருங்கி வந்த சமயங்களில் பல இயற்கை அழிவுகள் உண்டானது நிறுபிக்கப்பட்டுள்ளது.                                             இயற்கை நிகழ்வு இப்படி செல்ல,நாம் நமது வாழ்கை முறையில் யாரும் எப்படியும் போய்  செத்து தொலையட்டும் ,நாம் மட்டும் நன்கு வாழ [!]என்ன தந்திரம் செய்தாவது இந்த இயற்கையை சேதப்படுத்தியாவது வாழ்ந்து விட வேண்டும்,என்று திட்டமிடுகிறோம்.அன்றாடம் நாம் உபயோகிக்கும் ஏர்கண்டிசன்,குளிர்சாதனப்பெட்டி விடும் வாயுக்களால் காற்று வெளியில் ஓசான் மண்டலம் ஓட்டையாகி பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.ஒவ்வரு நாட்டு அணுக்கதிர் வீச்சு கழிவுகள்,மின்னணுக் கழிவுகள்,மருத்துவக் கழிவுகள்,கன உலோகமான கேட்நிய,பாதரசம் போன்ற தொழிற்சாலை கழிவுகள் முதலியவற்றை எப்படி அழிப்பது என்பது தெரியாமலே,ஒவ்வரு நாட்டு கடலிலும் யாருக்கும் தெரியாமல் கொட்டி வருகிறோம்.இதன் சமிபத்திய பாதிப்புதான் சோமாலியா நாட்டு மக்களின் நிலைமை.வளர்ந்த நாடுகள் எனச் சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய,அமெரிக்க நாட்டு அரசுகளின் சுயநலமான போக்கினால்,சோமாலிய நாட்டு மக்கள் சொல்ல முடியாத நோய்களிலும்,வாழவே முடியாத நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இதற்கு காரணம் அவர்கள் நாட்டு கடற்பகுதியில் அனைத்து மேலே சொன்ன கழிவுகளையும் கொட்டி அவர்கள் வாழ்வையே இன்று கேள்வி குறி ஆக்கி விட்டார்கள்.சோமாலிய நாட்டு கடற்பகுதியில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள மூன்றாம் நாட்டு கடற்பகுதியில் உள்ளும் இத்தகைய கழிவுகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொட்டி,அங்குள்ள மீன்வளம்,பிற  உயிர்கள் முதலியவற்றை அழிப்பதோடு கடல் மாதாவையும் நிலை குலைய வைக்கிறார்கள்.                                                  அட மனிதர்களே!இயற்கையை இப்படி நாசப்படுத்தியதால் தான்,நீங்களும் வாழ வேண்டாம் என்று இயற்கை நம்மை தண்டிக்கிறது.இதை நாம் உணருவோமா?இதை தீர்ப்பதற்கு என்ன வழி?என்று சிந்திப்போமா?                                                                                                                                       நண்பர்களே பதிவை படித்து கருத்தை தரவும்.நன்றி.                                  பின்குறிப்பு ;விரிவான விளக்கத்திற்கு ஜூலை 2009 உயிர்மை இதழின் சோமாலியா கட்டுரையை வாசிக்கவும்.                                   

செவ்வாய், 8 மார்ச், 2011

நரேந்திர மோடி நீங்கள் கொன்றது எத்தனை பாடி?

                             ஒரு நாட்டின் நிர்வாகி என்பவர்,தலைவர் என்பவர்,தன நாட்டின் எந்த குடிமகனின் மதத்தையோ,ஜாதியையோ,ஏழை  பணக்காரன் என்ற வித்தியாசத்தையோ,உயர்வு,தாழ்வு என்ற பேதத்தையோ பார்க்காமல் அனைவரும் நமது மக்கள் என்று எண்ணுவதே அழகு.அதுவே தலைவனுக்குரிய பண்பு.                                                                                                                                                          ஐயா,  நரேந்திர மோடி உங்களுக்கு மனசாட்சி உண்டா?உங்கள் மனசாட்சி உங்களிடம் பேசுமா?உங்கள் மனசாட்சி போடும் ஓலத்தில் உங்களுக்கு தூக்கம் வருமா?                                                      கோத்ரா ரயில் சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது.யாரு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் அதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது.சம்பவம் நிகழ்ந்து விட்டது.அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல் உங்களுக்கு கிடைத்திருக்கும்.அப்பொழுது உங்கள் மனம் என்ன நினைத்தது,நியூட்டனின் விதியையா?''ஒவ்வரு வினைக்கும் எதிர் வினை உண்டு ''இப்படியா?உங்கள் மூளை சிந்தித்தது.ஆகா!என்னவிதமான அறிவியல் பார்வை.நீங்கள் குஜராத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்ற இந்த பார்வை உதவும்.குஜராத் மக்களிடம்  இந்த அறிவியல் பார்வையை போதித்திர்கள் என்றால் நீங்கள் போன இடம் புல் முளைத்திருக்கும்.ஆனால் மக்களிடம் மதவாதம் என்ற இல்லாத ஒன்றை சொல்லி அவர்கள் அறிவை கெடுத்து,ஜெயித்து இன்று முதல்வராக அமர்ந்து இருக்கிறிர்கள்.                                                                                                                                           தார்மீகரீதியில்  நீங்கள் முதல்வராக தொடர எந்த நியதியும் இல்லை என்று தெரிந்த போதிலும் ,நீங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறிர்கள்.காலம் உங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்குமா?நிச்சயம் கொடுக்கும்.உங்கள் மூளை இயங்கும் வரை,உங்கள் இதயம் துடிக்கும் வரை உங்கள் மனசாட்சி உங்களை அரித்துக்கொண்டே தான்  இருக்கும் இதுதான் உங்களுக்கு தண்டனை.நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?உங்கள் மனசாட்சிதான் உங்களை தூங்க விடுவதே இல்லையே?உயிர் இருந்தும் நீங்கள் செத்த மனிதர்.                                                                                                                                             நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.         

திங்கள், 7 மார்ச், 2011

பெண்கள் போகப் பொருள்களா?

[  மகளிர் தினம்-சிறப்பு கட்டுரை ]  
                                         பெண் என்பவள் யார்?அவள் சக மனுசி.எப்படி ஆணுக்கு இதயம்,மூளை மற்றும் அனைத்து உறுப்புகளும் உள்ளதோ,அதைப்போல அனைத்து உறுப்புகளும் உள்ள மனுசிதான் அவள்.ஆனால் இந்த பெண்களை சில ஆண்களும்,ஆணாதிக்க நிறைந்த ஊடகத்துறையும் எப்படி கையாளுகின்றன?                                ஒரு மனிதனின் மனதை மயக்கக்கூடிய   மதுபானங்கள்,கஞ்சா போன்ற போதை வஸ்துவைப் போல பெண்களையும் ஒரு போகப் பொருளாக இந்த ஊடகங்கள் கையாளுகின்றன.                                                                                   பெண்களுக்கு சுய அறிவே கிடையாதா?சுய சிந்தனையே கிடையாதா?அவர்கள் ஆணைச் சார்ந்துதான் இயங்க வேண்டுமா?ஆண் சொல்வதை எல்லாம் கேட்டு தலையை ஆட்ட வேண்டுமா?இதை காலங் காலமாக மத நூல்களில் இருந்து நாம் போற்றி பாதுகாக்கும் திருக்குறள் வரை பெண்களை தாழ்வாகவே பேசி வருகின்றன.இதில் எது உண்மை.                                                                             ஒரு பெண்ணை பார்த்தால் வயது வந்த ஆண்களுக்கு மோகமோ,காமமோ வருவது இயல்பான இயற்கையான ஒரு நிகழ்வு.அடுத்த தலைமுறையை உருவாகக்கூடிய ஒரு உத்வேகம்.எதிர் எதிர் பாலினருக்கு ஏற்படக்கூடிய இயல்பான ஒரு ஈர்ப்பு.இதை ஆணும் சரி,பெண்ணும் சரி இயல்பாகவே உணர்வார்கள்.ஆனால் இந்த உணர்வை வைத்து ஊடகங்களும்,குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்கள் செய்யும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது.பெண்களை அணுகவே பட முடியாத ஒரு உயிரிய பொருளாகவும்,அவளை பார்த்து ஆண் எச்சில் வடிப்பதைப்போலவும் தவறாக சித்திகிரிக்கிரார்கள்.இதை எல்லாம் பார்த்து விட்டு இந்த இளைய சமுதாயம் பெண்களை எப்படி எதிர் கொள்ளும்?தமிழ் பட கதாநாயகன் பெண்களை எவ்வளவு மோசமாக கையால்கிறானோ அதற்கேற்றவாறு அவன் ஹீரோ?                                                 அட ஞான  சூனிய தமிழ் இயக்குனர்களே நீங்கள் சினிமாவில் காட்டும் பெண்களைப் போல்தான் உங்கள் வீட்டுப் பெண்களும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறிர்களா?தமிழ் பட கதாநாயகியை என்றாவது சுய சிந்தனையுள்ள பெண்ணாக காட்டியிருர்கிரிர்களா?  ஆனால் இதை எல்லாம் பார்த்துதான் தமிழ் பெண்கள் ,தமிழ் சினிமாவையே பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.உங்களுக்கு பெண்களின் உண்மைத்தன்மையை படம் எடுக்க தெரிந்தால் எடுங்கள்,இல்லை என்றால் நீங்கள் வயிறு வளப்பதற்கு எத்தனையோ வேலை உள்ளது.அதைச் செய்யுங்கள்.பெண் என்பவள் என்றைக்குமே ஆண்களின் சகவழி நண்பன் என்ற போக்கில் நீங்கள் எப்போது படம் எடுக்கிரிர்களோ!அன்று தான் தமிழ் சினிமா உருப்படும்.இதை தமிழ் பெண்கள் நன்கு உணர்வார்கள் .ஆனால் நீங்கள்?                         

                                                 பெண் நண்பிகளே பதிவை படித்து ஓட்டைப் போட்டு முக்கியமாக கருத்தை உங்கள் பார்வையில் விரிவாக தரவும்.நன்றி .   

ஞாயிறு, 6 மார்ச், 2011

சாரு நிவேதிதா மூடநம்பிக்கைவாதியா?

                                              உயிர்மை,ஆனந்த விகடன் போன்ற தமிழில் பிரபல பத்திரிக்கையில் எழுதி வருபவர் இவர்.இவர் தன்னை தமிழில் யாரும் மதிக்கவே இல்லை,ஆனால்மலையாளத்தில் என்னை கொண்டாடுகிறார்கள் என்று அடிக்கடி புலம்புவர்.இணையதளங்களிலும் சரி,பிரபல பத்திரிக்கையிலும் சரி என் பெயரே உச்சத்தில் உள்ளது.ஆனால் இந்த பாழாய்ப்போன தமிழ்ச் சமூகம் என்னை கண்டு கொள்வதே இல்லை என்று தாம் எழுதிய பத்திரிக்கையிலும்,இணையதளங்களிலும் தன் ஆதங்கத்தை தெரிவிப்பார்.                                                                                                                                                                                          ஒரு எழுத்தாளர் என்பவர் சமூகத்தில் உள்ள எந்த மக்களுக்கும் தவறான பாதையை காட்டக் கூடவே கூடாது.தனக்கு தெரியாத எந்த நபரையும் ஆகோ,ஓகோ வென புகழ கூடாது.ஆனால் இவர் சமிபத்தில் நித்தியானந்தா என்பவரின் உண்மை சீடனாகவே தன்னைக் காட்டிக்கொண்டு பத்திரிக்கையில் எழுதி வந்தார்.அவர் புகழ் பத்திரிக்கையில் நாறியவுடன் ''கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ''என்பதைப் போல தான் நிரபராதி என்றும்,அவர் உலக மகா'' செக்ஸ் பாம் ''என்பதைப் போலவும் எழுதி காசுப் பார்த்து விட்டார்.                                                            அது மட்டுமா செய்தார்?அவர்  தொகுத்த  சில கட்டுரையிலும் அசரத் [இஸ்லாமிய பிராடு ]   என்பவர் ஒருவர் இருக்கிறார்.அவர் மகாமேதை என்று சொல்வதுடன்,தனது வாசகி ஒருவரை குழந்தையோடு அமெரிக்காவில் இருந்து அழைத்து வந்து,வேனில் கூட்டிக்கொண்டு அந்த அசரத்தை சென்று பார்த்தாராம்.அதை பக்கம் பக்கம்மாக எழுதி காசு பார்த்து விட்டார்.                                                ஐயா,சாரு,நீங்கள் லத்தீன்அமெரிக்க இலக்கியங்களை படித்திருக்கலாம்,ஐரோபிய இலக்கியங்கலய்ப் படித்திருக்கலாம்,பா.சிங்காரத்தை பாராட்டலாம்,ஆதவனை ஆதரிக்கலாம்,இளையராஜாவை இம்சக்கிலாம் தப்பில்லை.ஆனால் மூட நம்பிக்கையை வளர்க்க கூடிய நிகழ்வுகளை தயவு செய்து தவிருங்கள்.                                                       இந்த உலகில் எந்த மனிதனுக்கும் [நபி,ஏசு,புத்தர் உள்பட ]மனித சக்தியை தவிர வேறு எந்த அபூர்வ சக்தியும் கிடையாது.இதை நீங்கள் உணர்ந்திர்களா?உணர வில்லையா?என்பது எங்களுக்கு தெரியாது?ஆனால் நீங்கள் தன்னையும் குழப்பி,உங்கள் வாசகரையும் குழப்புகிரிர்கள்.இப்படி நீங்கள் இருந்து கொண்டு தமிழில் என்னை எவரும் கொண்டாட மாட்டேன் என்கிறார்கள் ,என்கிறிர்கள்.இப்படி புலம்புவதை விட்டு விட்டு நல்ல இலக்கியம்  படைப்பதற்கு உங்கள் மூளையை செலுத்திவீர்களா?                                                                                      நண்பர்களே பதிவை படித்து சாருவுக்கு ஒரு ''ஓ''[ட்டு ] போடுங்கள்.நன்றி.                   

புதன், 2 மார்ச், 2011

விஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா?

                                         ''நான் முடிவு செஞ்ச பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று ஏதோ ஒரு சினிமாவில் நீங்கள் வசனம் பேசியதாக நினைவு.இதை நீங்கள் உங்கள் யதார்த்த வாழ்வில் கடைப்பிடிப்பிர்களா?அப்படி கடைப்பிடித்தால் நீங்கள் போகும் பாதையை யாரும் மாற்ற முடியாது.அது சரி,அதற்குரிய தகுதி உங்களுக்கு உள்ளதா?                                         நீங்கள் என்ன விக்கி லீஸ் அசாஞ்ச்ஜெவா,இல்லை உலக அரசியல் முழுவதையும் கரைத்து குடித்தவரா?இல்லை தமிழக அரசியல் பற்றியாவது ஏதாவது தெரியுமா?அதுப்பற்றி ஏதாவது வாசிப்பு பழக்கமோ, தமிழகஅரசியல் பற்றி ஏதாவது புத்தகமோ எழுதி இருக்கிறிர்களா?நீங்கள் செய்தது எல்லாம் நாலு குத்து பாட்டு,இரண்டு தரம் கெட்ட சண்டைகாட்சி,நாலு வரி பஞ்ச் வசனம்.இதை வைத்து உங்களை நாங்கள் எப்படி எடை போடுவது?நீங்கள் மேடையில் பேசினால் சினிமாவில் காமடி நடிகர் பேசுவது போல் உள்ளது.எந்த தன்நம்பிக்கையில் தமிழகத்தை புரட்டிப் போடப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறிர்கள்?தமிழக மக்கள் என்ன லூசா?                                                                                        உங்களுக்கு காலம் நிறைய உள்ளது.உலக அரசியலை படியுங்கள்.இந்திய அரசியலை படியுங்கள் ,நிறைய வாசியுங்கள்.நிறைய எழுதுங்கள்.அதன் பிறகு நான் அரசியலில் ஈடு படப்போகிறேன் என்று ஆர்வம் இருந்தால் தாராளமாக வாருங்கள் வரவேற்க்கிறோம்.அதைவிட்டு அப்பா சொன்னார்.அம்மா சொன்னார் என்று ''சின்னபுள்ள'' தனமா சொல்லிக்கொண்டு,தன்னையும் குழப்பி,உங்கள் ரசிகனையும் பைத்தியகாரனாக ஆக்காதிர்கள்.                                                              தல பதிவை படித்து ஓட்டை விஜய்  அண்ணாவுக்கு போடுங்கள்.நன்றி