இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

சனி, 5 பிப்ரவரி, 2011

மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?


                          அரசாங்கம் என்பது எதற்கு? அரசாங்கம் என்று ஒன்று தேவையா? என்று மக்கள் நினைத்து அவர்களுக்கு எதிராக வீதியில் வந்து போராடுகிறார்கள் என்றால்,இந்த மக்களை எல்லாம் அந்த அரசாங்கம் என்ன நினைத்து கொண்டிருக்கிறது?                                                       ஒரு மனிதன் கடந்த 30 வருடங்களாக ஒரு நாட்டை ஆண்டு வருகிறார்.மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல்,மக்களின் தேவையை நிறைவேற்ற முடியாமல் போனதால்,அதை எதிர்த்து கேட்ட அம்மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவி விடுகிறார்.இவர் நிலைமையை உணர்ந்து பதவி விலகாமல் இருப்பதற்கு தடையாக இருப்பது எது? ஆதிக்க உணர்வு,தான் என்ற அகங்காரம்,வாழ்வின் பெரும் பகுதியில் அதிகாரத்தை ருசித்த வெறி,இதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசை,இது தானே காரணமாய் இருக்க முடியும்.                                                                                                      உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்களையும் ஆளும் மனிதர்கள் தங்களது நிர்வாக கோளாறிநாளோ வயது காரணமாகவோ,செயலாற்ற முடியவில்லை என்றால் தான் ஓதுங்கி கொண்டு,அடுத்தவர்க்கு வாய்ப்பு கொடுப்பதுதான் அழகு.அதைச் செய்யாமல் ''அதிகாரத்தை நானே ருசிப்பேன் ''என்ற மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?மனிதர்களாகிய நீங்கள் சிந்திப்பீர்களா?                                                                                                        பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                  சிந்தனை

கருத்துகள் இல்லை: