இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

சனி, 26 பிப்ரவரி, 2011

எந்திரன் எழும்பி விட்டாரா?

                                                       தமிழக மக்களை எவ்வளவு பைத்தியமாக்க முடியுமோ? அவ்வளவு பைத்தியமாக்கி விட்டு கல்லா கட்டி விட்டார்கள்.அவருக்கு என்றே சில கூட்டனிகள்,அவருக்கு என்றே சில கூட்டங்கள் அனைவரும் சேர்ந்து தமிழக குடிமகனின் பாக்கெட்டை  கிழித்து எறிந்து விட்டார்கள்.                                                                                                                                                            அப்பாவி தமிழ் ரசிகனை மொட்டை போட்டு முடித்தாகிவிட்டது. அடுத்த படத்திற்கு அட்சாரம் போட்டாகிவிட்டது.இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் ஜுரம் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.நமது தலைவர்க்குத்தான் உடம்பிலுள்ள அத்தனை உறுப்புகளும் வேர்த்து விடுமே.அவர் பேசுவது நல்லதோ,கெட்டதோஅவருக்கே தெரியாது?வழக்கப்படி எந்த கட்சிக்கோ வாய்ஸ் கொடுக்க அவர் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது.                                                                                இந்நிலையில் மானமுள்ள தமிழன் என்ன செய்ய வேண்டும்?அரசியல்வாதி கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு,தங்களுக்கு பிடித்த எதிர் கட்சி தலைவருக்கு வாக்கை பதித்து விடவேண்டியதுதான்.மேலும் பல எந்திரன்ககள் கொடுக்கும் வாய்ஸ்சை இடது காதில் வாங்கி,வலது காதில் விட்டு நாம் ஒரிஜினல் தமிழன்தான் என்பதை நிருபிப்போமா?                                                                                              நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                       

கருத்துகள் இல்லை: