இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வெள்ளி, 13 மே, 2011

ஊழலே,உனது பெயர் இந்தியாவா?

கி.பி.2020 -ல் இந்தியா வல்லரசாகிவிடும் என ஒரு சாரர் சொல்லிக்கொண்டிருக்க,இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஊழலில் வல்லரசாகி விடுமோ என அச்சமடைய வேண்டியயுள்ளது.

ராமாயணம்,மகாபாரதம்,போன்ற இதிகாசங்களையும்,திருக்குறள் போன்ற உலக பொதுமறைகளையும் படித்த பண்பட்ட பாரத மக்கள்தான் விஞ்ஞான வழியில் ஊழல் செய்வது எப்படி?என்று வாழ்நிலையை அமைத்துக் கொண்டார்களோ? ''இப்படி எல்லாம் ஊழல் செய்ய முடியுமா? மதராசிகளே''என்று தமிழக பத்திரிக்கையாளர்களை பார்த்து வட இந்திய பத்திரிக்கையாளர்கள் சொல்லும் சொல்லைக் கேட்டால் நாங்கள் எல்லாம் திருக்குறளை பின்தொடர்ந்து செல்லும் உண்மையான மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளலாமா?எனத் தோன்றுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை ஸ்பெக்ட்ட்ரம் ஊழல்,கேதன்பரேர் ஊழல்,டெல்லி ஊழல்,மதுகோடா ஊழல்,சத்யம் ஊழல்,ஹவாலா ஊழல்,ஹர்சத் மேக்தா ஊழல்,பீகார் கால்நடை ஊழல்,சுக்ராம் ஊழல்,போபார்ஸ் ஊழல்,காமன்வெல்த் விளையாட்டு ஊழல்,பெங்களூர் மைசூர்சாலை கட்டுவதில் ஊழல்,I .P .L .ஊழல் இன்னும் இதில் விடுபட்ட பல ஊழல்களை சேர்த்தால் நமக்கு தலையே சுற்றிகிறது .

அது சரி ஊழல் செய்யாமல் வாழ முடியுமா?ஊழலின் ஊற்றுக்கண் என்ன?எந்த செயலுக்கும் லஞ்சம் கொடுக்க கூடாது?லஞ்சம் வாங்கக் கூடாது?என ஒவ்வரு தனி மனிதர்களும் நினைத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும்.இது இந்தியாவில்  சாத்தியமா?

வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ,தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அதை சரிசெய்ய வரும் அரசு ஊழியருக்கு ஏதாவது பணம் கொடுக்கிறோம்.சினிமா பார்க்கும் அவசரத்தில் தேவைக்கு மேல் பணம் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி செல்கிறோம்.இப்படி சிறு சிறு செயலுக்கு எல்லாம் லஞ்சம் கொடுத்து பழகி,இப்பொழுது காவல் துறை,பத்திரபதிவு துறை, வட்டார போக்குவரத்து துறை,மருத்துவ துறை,சட்டத்துறை,நீதித்துறை,வனத்துறை,பொதுப்பணித்துறை,நகராட்சி,மாநகராட்சி,அலுவலகங்கள்,தணிக்கைத்துறை,என்று எல்லாத்துறைகளிலும் லஞ்சம் கொடுப்பதும்,வாங்குவது ரொம்ப சாதாரணமாகிவிட்டது.ஊழலும் பழகிவிட்டது.இந்த லச்சனத்தில் இந்தியா 2020 -வல்லரசாகி விடுமாம்.என்னத்த  சொல்ல.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது,என்பதற்கு ஏற்ப ஒவ்வரு தனிமனிதனும் தனது கடமையை செய்ய லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ மாட்டேன் என்று நினைத்தால்தான் இந்தியா வல்லரசாக மாற வாய்ப்பு உள்ளது.மாற்றம் என்பது தனிமனிதன் மனதில் இருந்து தான் உருவாக வேண்டும் இதற்கேற்ற கல்வி முறையை குழந்தைப்பருவத்திலிருந்தே கற்றுக்குடுக்க வேண்டும்.மனித மனங்களில் நெறி முறைகள் வளர்க்கப்பட வேண்டும்.அதுவரை எத்தனை அண்ணா ஹசாரே வந்தாலும்,எத்தனை லோக்பால் சட்டங்கள் போட்டாலும் மாற்றம் என்பது இந்தியாவில் சாத்தியமில்லை.இதை இந்தியராகிய நாம் உணருவோமா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.

வெள்ளி, 6 மே, 2011

அட்சயதிருதியை-அப்பட்டமான வியாபார மோசடியா?

உலகம் முழுவதும் வியாபாரிகளின் ராச்சியம் தான் கொடிக் கட்டி பறக்கிறது.தனது பொருள்களை விற்ப்பதற்க்காக வியாபாரிகள் செய்யும் தந்திரம் சொல்லி மாளாது.மக்கள் நுகர்வு பொருள்களை வாங்கி குவிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் வருடம் முழுவதும் ரூம் போட்டு யோசித்ததின் விளைவு தான் இந்த அட்சய திருதியை.

வியாபாரிகளுக்கு வருடம் முழுவதும் வியாபாரம் இருக்க வேண்டும்.ஏதாவது காரணத்தால் வியாபாரம் குறைந்து விட்டால்,உடனே ஆடிக்கழிவு,சம்மர் கொண்டாட்டம்,அட்சயதிருதியை,தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ்,ரம்சான்,        பக்ரீத்,விழாக்கால சலுகைகள்,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு,நோட்டுப்புத்தகம்,சீருடைதள்ளுபடிகள்,முகூர்த்த சீசன்கள் என்றால் ஒரு பட்டு புடவை எடுத்தால் இரண்டு இலவசம்.ஐயா,வியாபாரிகளே உங்கள் லீலைக்கு அளவே இல்லையா?

தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்க்காக மக்களை எந்த வழியில் எல்லாம் முட்டாள் ஆக்க முடியுமோ அந்த வழியை எல்லாம் தேர்ந்து எடுப்பார்கள்.பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள்,இணையதளங்கள்,வானொலிகள்,மூலம் அட்சய திருதியை என்ற இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.தொலைகாட்சி செய்திகளில் தங்கம் விலை குறைவு,கிராமுக்கு அவ்வளவு தள்ளுபடி,இவ்வளவு தள்ளுபடி எனக்கதை விடுவார்கள்.அட்சயைதிருதியை முடிந்த பிறகு 500kilo தங்கம் விற்றது என கதை விடுவார்கள்.இன்று தங்கம் வாங்கினால் மங்கலம் வரும் என்று பத்திரிக்கை மூலம் கட்டுரை எழுதுவார்கள்.[போன அட்சயதிருதியையில் எனது நண்பன் வாங்கிய பத்து சவரன் தங்கம் திருட்டு போய் இன்னும் கிடைக்கவில்லை ,இது தனிக்கதை]மகாபாரதம்,ராமாயணம்,போன்ற கதைகளை எல்லாம் எடுத்து விட்டு,சாமிக்கதைகளை சொல்லி கட்டுரை எழுதி மக்களின் பணத்தை எல்லாம் சுரண்டுவார்கள்.தங்களிடம் உள்ள தரம் குறைந்த நகைகளை எல்லாம் இந்த அட்சயதிருதியையில் விற்று காசாக்கி விடுவார்கள்.

இதை சரி  செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? அட்சயதிருதியை என்று சொல்லிக்கொள்ளும் ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருந்து மௌன விரதம் கடைப்பிடித்தால் உங்கள் பணம் காப்பாற்றப்படுவதோடு,உங்கள் உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.இதை மனிதனாகிய நாம் உணர்வோமா.

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.