அனைத்து ஊடகங்களும் அவரது லீலைகளை படம் பிடித்து காட்டின .அவர் சார்ந்த நம்பிக்கையை ஆண்மிகவாதிக்கே உரிய சில அடிப்படை நியதிகளை மீறுவதற்கு என்னவிதமான தந்திரங்கள் செய்ய முடியுமோ? அனைத்தையும் செய்ததோடு, தான் அனைத்து உணர்வுகளும் உள்ள சாதாரண மனிதன் தான் என்பதை நிருபித்து விட்டார். இந்நிலையில் தான் குற்றமற்றவன் நான் நிரபராதி,என்னை சில அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தனர் என்றும் ,நான் உண்மையானவன் என்பதை நிருபிப்பதற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை சென்று உண்மையை சொல்வேன் என்றும் ,பிரதமர்,முதல்வர் ,கவர்னர் என்று அனைவரிடம் நியாயம் கேட்பேன் என்றும் ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார் என்றால் நாம் எல்லாம் என்னவிதமான மனிதர் என்று அவர் நினைத்து கொண்டிருக்கிறார்?இவருக்கு என்ன தைரியம் இருந்தால் இப்படி பேட்டியளிப்பார்? 2G முலம் நாட்டிற்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை. அவர் குற்றமற்றவர் என்று ஒரு காங்கிரஸ் மத்திய மந்திரி பேட்டியளிக்கிறார்.ஆனால் ஊழல்வாதியை c .b .i .கைது செய்கிறது.அவர் குற்றமற்றவர் என்றால் C .B .I .ஏன் ?அவரை கைது செய்கிறது இன்னொரு தலைவர் இருக்கிறார். அவர் மீனவர் பிரச்சனையை தீர்க்க டெல்லி சென்றார் என்று பார்த்தால் கூட்டணி பற்றி பேச சென்றாராம்.போன வழியில் பிரதமரை பார்த்து, ஐயா எங்கள் மீனவர் பிரச்சனையை தீர்க்க எதாவது செய்யுங்கள் என்றாராம்.அவர் மீனவர் பிரச்சனையா?அப்படி என்றால் என்ன? என்று கேட்டாராம் ?அதை இங்கே வந்து அவர் பேட்டியளிக்கிறார்,என்றால் நீங்கள் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தால் நாங்கள் என்ன? பாடு படுவோம். அய்யா,ஆன்மிகவாதிகளே[!] அரசியல்வாதிகளே இந்தியர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ?அவ்வளவு கேவலப்படுத்தி விட்டிர்கள்.நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டுவதற்கு இந்தியர்கள் என்ன இளிச்சவாயன்களா? உங்கள் அராஜகங்களுக்கு எகிப்து மக்களே உதாரணம்.அவர்களை பார்த்திர்களா?ஆட்சியாளர்களுக்கு எதிராக எபபடிபொங்கி எழுகிறார்கள் என்று?நீங்கள் சரியில்லை என்றால்,காலமும் உங்களுக்கு எதிராக எங்களை எழுப்பி விடும்.
1 கருத்து:
good
கருத்துரையிடுக