இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அன்பு கிலோ என்ன விலை?

                          இன்றைய உலக வாழ்வில் பெற்றோர் குழந்தைகளுக்கு இடையில்,உற்றார் உறவினருக்கு இடையில்,நண்பர்களுக்கு இடையில்,கணவன் மனைவிக்கு இடையில் உள்ளதெல்லாம் அன்பு தான?அன்பு என்று ஒன்று உண்டா?அன்பு என்பதன் வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?                                                                                                                                                               அன்பு என்பதே ஒரு சுய நலம் சார்ந்த வார்த்தை தானா? எல்லா மனிதர்களும் தனது சுயநலத்திர்காகத்தான் அன்பு செலுத்திகின்றார்களா?தான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்பு செலுத்திகின்றார்களா?இல்லை அன்பு செலுத்தப்படுபவர்நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாரா?                                                           இன்றைய குழந்தைகள் தனது பெற்றோடமிருந்து என்னவெல்லாம் கறக்கலாம்,தனது ஆசையை பூர்த்தி செய்வதற்கு பெற்றோரை எவ்வாறு பயன் படுத்திக்கொள்ளலாம்? என்று எண்ணுகிறார்கள்.தனது ஆசையை பூர்த்தி செய்த பிறகு அவர்களிடம் இருப்பதெல்லாம் கறந்த பிறகு ,அவர்களது இறுதிக் காலத்தில் கண்டும் காணாமலும் செல்லும் துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.இதன் விளைவு அவர்களது இறுதிக் காலம் முதியோர் இல்லங்களில் கழிய நேரிடுகிறது.இப்பொழுது தான் நம்முள் எழும் கேள்வி?பெற்றோர்,குழந்தைகளுக்கு இடையே ஏற்படுவது அன்பா?அப்படி அன்பு தான் என்றால் அதன் இறுதி வழி இதுதானா?இதை தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்.யாருக்கும் யாரும் வழி சொல்லமுடியாது.நாம் மட்டுமே சிந்திக்க வேண்டும்.சிந்திப்போமா?                                                                                                                                            நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி           

கருத்துகள் இல்லை: