இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வியாழன், 17 பிப்ரவரி, 2011

அரசாங்கம் என்று ஒன்று தேவையா?

              உலக மக்களில் பல மனிதர்கள் தனது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிரர்கள்.அரசாங்கம் நமக்கு எதற்கு?அரசாங்கம் நமக்கு தேவையா?என்று சிந்தித்ததன் விளைவு தான் இது.இவர்கள் இப்படி சிந்திப்பதற்கு காரணம் என்ன?                                                                                             ஒவ்வரு நாட்டு அதிபர்களும்,தலைமை பொறுப்பில் உள்ள தலைவர்களும் மக்கள் நன்றாக வாழ வேண்டும்,மக்கள் வாழ்க்கையானது சிக்கலில்லாமல் அமைதியாக கழிய வேண்டும் என்று நினைக்கிறார்களா?மக்களின் பிரச்சனையை தீர்க்கதான் ,தாம் தலைவராகவோ,அதிபராகவோ இருக்கிறோம் என்று நினைக்கிறார்களா?ஆனால் மக்கள் தங்கள் பிரச்சனையைத் தீர்க்கத்தான் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்.                                                                                     ஆனால் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக இவர்கள் மக்களின் பிரச்சனையை கவனிப்பதே இல்லை.தான் நன்றாக இருப்பதற்கும்,தனது சொந்த பந்தங்கள்.தலைமுறைகள் சொத்து சேர்த்து சுகமாக வாழ்வதற்கும் தனது பதவியை பயன்படுத்திக் கொள்கிறார்கள்,கடைசி காலங்களில் இவர்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டால் உலகம் முழுவதும் அசையும் சொத்தாகவோ,அசையா சொத்தாகவோ எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு சேர்த்து வைத்து விடுகிறார்கள்.                                                                                                                                               தன்னலம்.சுயநலம் இதையே குணமாக கொண்ட தலைவர்களே நீங்கள் தனக்காக வாழாமல் தனது மக்களுக்காக வாழ்கையை அர்ப்பணிப்பிர்களா? அப்படி அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் நீங்கள் அரசியலில் ஈடுபடுங்கள்.இல்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.பொறுப்பில்லாத உங்களால் மக்கள் படும் வேதனையின் விளைவு தான் இது.உலக அதிபர்களே உலக தலைவர்களே சிந்திப்பிர்களா?                                                                                                                                                     நண்பர்களே பதிவை படித்து கருத்து தரவும்.நன்றி .                       

5 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

உண்மைதான் தேலையேயில்லை..

See.,

என் தேசம் எரிந்துபோகுமா?

மைதீன் சொன்னது…

களைகளை நாம்தான் பிடுங்க வேண்டும், அதற்க்குண்டான வலிமை மேயிலிருந்து தொடங்குகிறது.

singh from callezee சொன்னது…

We dont want truly

காதர் அலி சொன்னது…

நன்றி கருண் .மைதீன் ,சிங் சார் .

குறையொன்றுமில்லை. சொன்னது…

முற்றிலும் உண்மையான கருத்து.