இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

புதன், 16 பிப்ரவரி, 2011

இஸ்லாம் முறைப்படி முஸ்லிம்கள் வாழ்கிறார்களா?

                               இன்றைய வாழ்கையில் போலித்தனங்கள் தான் நிசங்களா?மனிதர்கள் மதங்களை தீவிரமாக கடைபிடிக்கிறார்களா?கடைபிடிக்குமாறு நடிக்கிறார்களா?மதம் சொன்ன கருத்துக்களை அவர்கள் கடைபிடித்து வாழுமாறு இன்றைய வாழ்கை முறை இருக்கிறதா?இப்பொழுது உள்ள நிலையில் மனிதன் மதக்கருத்துகளை கடைப்பிடித்து வாழ முடியுமா?                                                                                                                          இஸ்லாம் முஸ்லிம்களை வட்டி வாங்குவதையோ,கொடுப்பதையோ ஹராம் [விலக்கப்பட்டது]ஆக்கியுள்ளது.இந்நிலையில் பல மனிதர்கள் வாங்குவதற்கும்,சில மனிதர்கள் வட்டிக்கு விட்டு தொழிலாகவே செய்து வரும் நிலையுள்ளது.ஆனால் இவர்கள் அனைத்தையும் செய்து விட்டு நோன்பு இருக்கிறார்கள்.5 நேரம் தொழுகிறார்கள்.இன்னும் மதம் என்ன சொன்னதோ,அதை செய்கிறார்கள்.                                                                                                                                 இவர்களுக்கு மனசாட்சி உண்டா?இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?மதத்தையா?மனிதனையா? மனிதர்கள் நல வாழ்கை வாழத்தான் மதங்கள்.மதக்கொள்கையை கடைபிடித்து வாழ முடிந்தால் வாழுங்கள் !இல்லையன்றால் என்னால் முடியவில்லை என்று தைரியமாக ஒதுங்கி கொள்ளுங்கள்.இதில் போலி வேஷம் வேண்டாம்.தனது சுய நலத்திற்க்காக மதத்தை வளைத்து உலகில் தான் வயிறு வளர்ப்பதற்காக வேஷம் போடும் கபடதாரிகலே நீங்கள் உங்கள் நிலையை மாற்றி கொள்ளுங்கள்.நீங்கள் உங்கள் வாசதிக்காக இஸ்லாமை வளைத்திர்கள் என்றால் காலம் இவ்வுலகில் உங்களை "போலித்தனங்களின் உச்சம்'' என்றுதான் சொல்லும்.                                                                               போலித்தனமாக வாழ்வதையே நிலையாக கொண்டிர்கள் என்றால்,இரட்டை வேஷம் போடுவதையே தொழிலாக கொண்டிர்கள் என்றால்,உங்களால் முறையாக இஸ்லாத்தை கடைப் பிடிப்பவர்களுக்கும் கெட்ட பெயர்.இஸ்லாத்தை வளர்க்க போகிறிர்களா?கெடுக்க போகிறிர்களா?.சிந்தியுங்கள்,முடிவு உங்கள் கையில் தான் உள்ளது.                                                                                                                                                     நண்பர்களே பதிவை படித்து அனைவரும் கருத்து சொல்லலாம்.நன்றி.                         

2 கருத்துகள்:

மைதீன் சொன்னது…

உண்மை! உண்மை!!உண்மை!!!

vivek சொன்னது…

ஆம் அனைவரும் அப்படிதான்................................