இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

விஞ்ஞானிகளே நீங்களுமா?

                               எங்கள் நாட்டின் பிரமதர்,முதல்வர் ,அமைச்சர்.அரசியல்வாதி அரசு ஊழியர்.இன்னும் அரசு துறையில் உள்ள யாவருமே ஊழல் செய்ய அஞ்சாதவர்கள்.அனைத்து ஊழல்களும் செய்து விட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எபபடி?என்று தான் பேசி வருவார்கள்.நாங்களும் அவர்கள் சொல்வதை கேட்டு பெரியவர்கள் சொல்கிறார்கள் அவர்கள் பேச்சில் உண்மை இருக்கும் என்று மண்டை ஆட்டிக் கொள்வோம்.                                                                                                       ஐயா,எங்கள் அரசியல்வாதி செய்யும் அக்கிரமங்களை எல்லாம் சகித்து,உங்களைப் போன்ற படித்த அறிவுஜீவியான நீங்கள் உங்கள் சேவையின் மூலம் எங்களுக்கு நற்பலன்களை தருவீர்கள்!என்று நம்பினோம்.ஆனால் நீங்கள் பிரதமர் அலுவலகத்திற்கே தெரியாமல் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம் போட்டுள்ளிர்கள்.அந்த ஒப்பந்தத்தின் மூலம் நீங்கள் அனுபவித்த,அனுபவிக்க போகிற சொகுசுக்காக உங்கள் கல்வியறிவை பயன் படுத்திக் கொண்டிர்கள்.                                                                                                                                                            இந்த நாட்டில் யார்?யோக்கியன்?நான் மட்டும் ஏன்?யோக்கியனாக இருக்க வேண்டும் என உங்கள் மனசாட்சி கேட்டதா?மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது யாருக்கு வேண்டும் உங்கள் மனசாட்சி என்று நீங்கள் நினைத்து விட்டிர்களா?போதுமய்யா போதும் உங்கள் படித்த கிரிமினல் அறிவு.                                                                                                                                                     சாதாரனமக்களாகிய நாங்கள் விலைவாசி உயர்வு,அரசியல்வாதிகளின் அட்டுழியம் ஓட்டுக்காக இவர்கள் போடும் ஆட்டம்,இதை எல்லாம் பார்த்து நொந்து போயிருக்கிறோம்.இதில் நீங்கள் வேறு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிரிர்கள்.படித்தவன் சூது செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான் ,என்று ஒருவர் புலம்பி விட்டு போய் சேர்ந்தான்,இதை எல்லாம் படித்து விட்டுமா நீங்கள் இவ்வழியை தேர்ந்து எடுத்திர்கள் !யாரையும் சொல்லி குற்றமில்லை ,மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி.                                                                                                                                                                                             நண்பர்களே பதிவை படித்து கருத்தை சொல்லவும் .நன்றி                                                                                                               பின்குறிப்பு :ஆன்ட்ரிக்ஸ் என்பது இஸ்ரோ  விண்வெளி துரையின் வணிகப்பிரிவு.இவர்களின் S -பாண்ட் அலைவரிசையின் ஊழலை சொல்கிறது இக்கட்டுரை.                 

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நீதி துறையிலாவது நேர்மையானவர்கள் இருந்தால் சட்டம் ஒழுங்காக தன் கடமையை செய்தால் ஓரளவு எல்லாம் சரியாகிவிடும். ஆனால் எல்லாமே நாடகமாகத்தானே இருக்கிறது. யாரைத்தான் நம்புவதோ?.

காதர் அலி சொன்னது…

உண்மையை உணர்ந்து நீங்கள் சொன்ன கருத்துக்கு நன்றி விஜயன்.