இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

அமெரிக்கா மோகம் குறையுமா?

            மாணவர்களின் காலில் கண் காணிப்பு காமிராவை பொருத்தி ஒரு அரசாங்கம் வேவு பார்க்கிறது என்றால், அந்த அரசாங்கம் அந்த மாணவர்களுக்கு என்ன விதமான கல்வி முறையை கற்றுக் கொடுக்கும்?அங்கிருந்து கற்று வரும்  மாணவர்களும் எவ்விதமான சிந்தனையில் கற்று வருவார்கள்                                                                                                                               உலகம் முழுவதும் உள்ள மக்களைச் சுரண்டி,தன் மக்கள் மட்டும் அதிக நுகர்வு கலாச்சாரத்தில் விழுந்ததின் விளைவு தான் இந்த பொருளாதார நெருக்கடி.இதனால் உலகில் உள்ள எல்லா மனிதர்களும்,ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டார்கள்.தனது சுயநலத்திற்காக அனைத்து நாட்டு அரசாங்கங்களின் உள் விவகாரங்களில் தலையிட்டு,அரசாங்கங்களையும் கவிழ்த்ததோடு,அதிபர்களையும் பலியிட்டு தன்னை நியாயப்படுத்திக்கொண்டது.இதுதான் இவர்களின் பிறவிக் குணம்.                               இந்நிலையில் யாரையுமே நம்பாத ஒரு தேசத்திர்க்கு  சென்று,அங்கிருந்து, மாணவர்கள் என்ற போதிலும் தன் தரம் தாழ்ந்து கல்வி கற்று வரும் இந்திய மாணவர்களின் மனநிலை எபபடி இருக்கும்? தான் 24 -மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறோம்,என்ற மனநிலையே அவர்களை கல்வி கற்க விடுமா? தான் மாடுகளுக்கு மணி     கட்டியதைபோன்றநிலையில்  இருக்கிறோம் என்ற சிந்தனையே அவர்களை அவர்கள் கடமையை சரி வர செய்ய அவர்களது மனது அனுமதிக்குமா?                                                                                                                                                    அமெரிக்கா          அரசாங்கத்தின் அனுமதியை முறையாக கடைபிடிக்காத கல்வி நிலையங்களின் டுபாக்கூர் வேலைதான் இது.நாம் அமெரிக்கா சென்று கல்வி பயில வேண்டும் என்ற அதீத ஆர்வத்தினால் சரியாக விசாரிக்காமல் சென்றதின் விளைவு இது.ஏதொ விசாரிக்காமல் சென்றதற்காக நீங்கள் கொடுக்கும் விலை இது.இதற்காக அவர்கள் கொடுக்கும் எதிர்வினையும் கொடுமையின் உச்சம்.இவ்வளவையும் பார்த்த  வருங்கால,இந்திய மாணவர்களின் அமெரிக்கா மோகம் குறையுமா?                                                                                                                                                                    நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.            

2 கருத்துகள்:

மைதீன் சொன்னது…

என்னத்த சொல்ல...

பெயரில்லா சொன்னது…

kattaayam kuraiyaathu.nalla pathivu.