இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

உறவுகளே பேணிக் காக்க முடியுமா?



Post                                                                                                                                                                           
                        இன்றைய அவசர உலகத்தில் மனிதன் தனது தேவைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறான்.எங்கு ஓடுகிறான் ?எதற்கு ஓடுகிறான் ?என்று தெரியாமலே அவன் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விடுகிறது.அவன் குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு திரும்பி பார்த்தால் அவன் மனநிறைவோடு வாழ்ந்தானா ?அவனால் சமூகத்திற்கு எந்த விதமான பயனையும் கொடுக்க முடிந்ததா ?சமூகத்திற்கு கொடுக்க முடிந்ததோ ,இல்லையோ தனது உறவுக்காவது நம்மால் முடிந்த உதவியை செய்ய முடிந்ததா?என்ற கேள்வி அவனுள் எழுந்தால் அவனது மனசாட்சி என்ன சொல்லும் ?அது அவனுக்கே வெளிச்சம். இந்நிலையில் அவனுள் எழும் கேள்வி உறவுகளை பேணிக் காக்க முடியுமா ?                                                                                                                                                                       யாரோ முகம் தெரியாத மனிதர்களை சந்திப்பதற்கும் ,பொழுது போக்கு என்ற நிலையில் பல இடங்களில் சுற்றி திரிவதற்கும் அனுமதிக்கும் அவனது மனது ,தனது இளமை காலத்தில் தான் வாழ்ந்த இடங்கள் ,தான் கடந்து வந்த வாழ்கைப்பாதையில் சந்தித்த மறக்க முடியாத மனிதர்கள்,தன் வாழ்வைப் போலவே பிறரது வாழ்வும் எப்படி மாறிப்போகிறது ,என்று அறியும் ஆவல் ,என்று அவனது மனம் பழங் காலத்து நினைவுகளை அசை போடுமா?அல்லது அன்றைய நிலையில் மீண்டும் இன்னும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று தான் கணக்கு போடுமா?எப்படி ?வாழ வேண்டும் எப்படி? சிந்திக்க வேண்டும்.நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.                                                                                  நண்பர்களே பதிவை படித்து தங்கள் கருத்தை சரியோ? தவறோ?என்னிடம் பகிர்ந்து கொள்ளலாமே .நன்றி .

2 கருத்துகள்:

muhammed சொன்னது…

nengal ipothu ena sinthanai il irukuringa????..... voravugslai peani kathuthan parungalean ....ungalal muditha aluvu apothuthan athan practical lana anupavam kidaikum apothuthan inum alamaga ungal sinthanai mealonkum ......... inipu endru paper il ealuthi nakil vaitha inikava pogirathu !!!!!!!!!!!

காதர் அலி சொன்னது…

உங்கள் பதிவிற்கு நன்றி பீர் சார்.