ஒரு காலத்தில் என் போன்ற பாமர ரசிகர்களை எல்லாம் தன் நடிப்பாலும் ,புரியாத அறிவுஜீவி பேச்சாலும் கவர்ந்தவர் நீங்கள் .நடிப்பு என்றால் நீங்கள்தான் பகுத்தறிவு என்றால் நீங்கள்தான் ,முற்போக்கு பேச்சு என்றால் நீங்கள் தான் .ஆஹா ஒரு கலைங்கனுக்குத்தான் எத்தனை விதமான பார்வைகள் .உங்களை கண்டு நாங்கள் பிரமித்து போனோம் .ஆனால் நீங்கள் பக்கா காப்பி மன்னன் என்று சமீபத்திய இணையதளங்களின் சேவைகள் சொல்லுகின்றன.உங்களுக்கு கொஞ்சமாவது சுய சிந்தனை உண்டா ?யாரை ஏமாற்ற பார் கிரிர்கள்? .நீங்கள் உங்கள் கம்பெனி படம் எடுத்தால் குறைந்த முதலிட்டில் செலவே இல்லாத உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் s .தாணு போன்ற தயாரிப்பாளர் கிடைத்தால் புரியாத கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவூட் பாணியில் சண்டை காட்சிகள் [அது படத்தில் இல்லை அது எடுக்க செலவு பல கோடி ]அவரை அழித்தே விட்டிர்களே ஐயா ,உங்களால் எத்தனை தயாரிப்பாளர் தலையில் துணியை போட்டிருர்பார்காலோ ?யார் கண்டார்.புதிதாக வசனம் எழுத புறப்பட்டு விட்டிர்கள் .இந்த லட்சணத்தில் அசலான தமிழ் படங்களை எடுக்கும் நல்ல சில இயக்குனர்களிடம் உங்கள் பாழாய் போன பர்மா பஜார் dvdkkalai கொடுத்து அதை பார்த்து காப்பி சினிமா அடியிங்கள் என்று ஆலோசனை வேறு அளிக்கிறிர்கள் போதுமையா உங்கள் காப்பி கலாச்சாரம் .உங்கள் பிட்டை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் .உங்கள் அசட்டு அறிவுரையை அவர்களிடம் கூறி அவர்கள் பாதையை மாற்றாதிர்கள் .உங்களுக்குத்தான் சுய சிந்தனை இல்லை .புதிதாகவும் ஆரோக்கியமாகவும் வருபவரை கெடுக்காதிர்கள். நண்பர்களே படித்து கருத்தை பதியவும் .நன்றி
4 கருத்துகள்:
கண்டிப்பாக கண் திறப்பார் கமல் ,அடுத்த படத்தை காப்பி அடிப்பதற்காக
mothalla nee olunga copy adikkama eluthu..
அனாதையான உங்கள் அறிவுரைக்கு நன்றி சார். .
கமல் ஷங்கர் போல் சொந்தபடங்கள் என்றால் செலவே இல்லாமலும், பிரல் படங்கள் என்றால் அதிக செலவு வைபதாக எனக்கு தோன்றவில்லை. உதாரணமாக தமிழில் அதிக செலவில் அதாவது கோடிகளில் படம் எடுக்க தொடங்கியதே கமல் தான். 1985 ல் வெளி வந்த விக்ரம் தான் அது. அதற்காக ஒரு தனி புதாகமே போட்டார்கள் (கமலின் ஒரு கோடி ருபாய் கனவுகள்).
அவருடை தயாரிப்பில் இது வரை 15 படங்கள் வந்துள்ளது.
ராஜ பார்வை
விக்ரம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அபூர்வ சகோதரர்கள்
மைக்கேல் மதன காமராஜன்
தேவர் மகன்
மகளிர் மட்டும்
குருதிப்புனல்
சதிலீலாவதி
சாச்சி 420 (ஹிந்தி)
ஹே ராம்
நல தமயந்தி
விருமாண்டி
மும்பை எக்ஸ்பிரஸ்
உன்னை போல் ஒருவன்
ஈநாடு(தெலுகு)
இதில் பட்ஜெட் படங்கள் என்று பார்க்க போனால்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
மகளிர் மட்டும்
குருதிப்புனல்
மும்பை எக்ஸ்பிரஸ்(பரிசோதனை முயற்சி)
உன்னை போல் ஒருவன்
சொந்த பணத்தில் பட்ஜெட் படங்கள் மட்டுமே எடுப்பவராக இருந்தால் அவர் ஏன் மருதநாயகத்தையும் பொன்னியின் செல்வத்தியும் முயல வேண்டும்.
அவருடைய வருமானத்தை அவர் பிற நடிகர்களை போல் பணம் கொழிக்கும் ரியல் எஸ்டேட், திருமண மண்டபம், பள்ளிக்கூடம் , சொந்த ஊரில் தொழிற்சாலை என்று எல்லாம் செலவழிக்காமல் சினிமவீற்கே செலவு செய்கிறார் என்பதே உண்மை. இதற்காக ஏற்பட்ட தகராறில் அவர் அவருடைய அண்ணன் சாருவிடம் கூட பேசுவதில்லை.
மற்றபடி அவர் ஒரு ப்லாக்ரிஸ்ட் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.
கருத்துரையிடுக