இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டது.இருமுனை போட்டி நிகழ்கிறது.தி .மு .க,அ.தி .மு க   இரு அணிகளில் ஜெய்க்க போவது யாரு?ஓட்டு போடுவதற்கு முன் இரு அணிகளின் பலம்,பலவீனம் தெரிந்து கொண்டால் நல்லது தானே. முதலில் தி.மு.க.

தி.மு.க.வின் பலம் 

1 .தமிழகம் முழுவதும் பாலங்கள் கட்டி நகரை அழகு படுத்துவது.
2 .சமச்சீர் கல்விமுறையை நடை முறை படுத்துவது.
3 .மினி பேருந்து வசதியை ஏற்படுத்தியது.
4 .1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுத்து ஏழைகளை ஆதரித்தது.
5 .உழவர் சந்தையை ஆரம்பித்தது.

தி.மு.க.வின் பலவீனம் 

1 .2 G ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்தியாவிலேயே வரலாறு காணாத ஊழல் செய்தது.
2 .மதுரையை சுற்றி கிரானைட்டு கொள்ளை.
3 .மணல் கொள்ளை.
4 .தமிழ் நாடு முழுவதும் தெருவுக்கு தெரு ''டாஸ்மாக்''கை தொடங்கி தாய்மார்களின் வயிற்றில் அடித்தது.
5 .கட்டபஞ்சாயத்து,ரௌடி இசத்தை ஒடுக்காதது.
6 .சாதாரண மக்களால் சமாளிக்க முடியாதபடி விலைவாசி உயர்வு.
7 .மின் தட்டு பாடு.
8 .தமிழகம் முழுவதும் வாரிசுகளின் அடாவடி.
9 .திரைத்துறையில் அனைத்து வாரிசுகளின் ஆதிக்கம்.
10 .இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை பிச்சை காரனாக்கியது.
11 .தமிழக மீனவர்கள் பிரச்சனையை கண்டும் காணாமலும் இருப்பது.
12 .ஈழ தமிழர் பிரச்சனையில் தன்னால் சாதிக்க முடியும் என்ற வாய்ப்பிருந்தும் ,மௌனமாக இருந்தது.
13 .வாரிசுகளுக்கு பதவி வாங்கி தர மட்டும் டெல்லி செல்வது .
14 .தொலை நோக்கு பார்வை இல்லாதது.
15 .வாரிசுகள் T .V .,ரேடியோ,விமானகம்பெனி என பணத்தை குவிப்பது.

அ .தி .மு க .வின் பலம் 


1 .குடும்ப உறுப்பினர்,வாரிசுகள் அதிகம் இல்லாததால் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாதது.
2 .லாட்டரி சீட்டை ஒழித்தது.
3 .ரௌடி இசம்,கட்டபஞ்சயத்தை தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது.
4 .மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தது.
5 .தொட்டில் பெண் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது.
6 .துணிந்து முடிவு எடுக்கும் திறன்.
7 .கந்துவட்டி தடை சட்டத்தை கொண்டு வந்தது.

அ,தி.மு.க வின் பலவீனம்

1 .கூட்டணி கட்சிகளை மதிக்காமல் ''தான் தோன்றி தனமாக ''நடந்து கொள்வது.
2 .சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம்.
3 .சிறந்த எதிர் கட்சியாக செயல் படாமல் இருப்பது.
4 .சிறுபான்மை இனத்தவரை கண்டு கொள்ளாமல் இருப்பது.
5 .இவ்வளவு அனுபவம் பெற்றும் அரசியல் நெளிவு சுழிவுகளை படிக்காமல் இருப்பது.
6 .சிறந்த பேச்சாளர்கள் இல்லாதது.

இது எனது பார்வை தான்.இதில் விடுபட்டது நிறைய இருக்கலாம்.உங்கள் பார்வையையும் சேர்த்து ,சிந்தித்து வாக்களிக்கவும்.என்ன சரிதானே.

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி. 

2 கருத்துகள்:

Chitra சொன்னது…

சுவாரசியமான தொகுப்பு.... இதை விட்டா அது - அதை விட்டா இது என்ற நிலைதானே இருக்குது.... :-(

சக்தி கல்வி மையம் சொன்னது…

யோசிப்போம்..