இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

திங்கள், 21 மார்ச், 2011

மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?

                இந்த உலகில் மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்?ஏன் வாழ்கிறார்கள்? மனித வாழ்கைக்கு தான் அர்த்தம் என்ன?மனிதன் தான் வாழ்வதால் என்ன?சேதியை இந்த உலகிற்கு தெரிவிக்கிறான்?                                                                                                                 ஒரு அதிகாரி தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால்,அந்த அதிகாரம் என்பது சமூகத்தை நல்வழியில் நடத்தத்தான் என்பதை உணர்ந்து அதன்படி செயல் படுகிறார்களா?அதிகாரம் தனக்கு கிடைத்து விட்டால் ''தான் ''என்ற அகங்காரம் கொண்டுஅந்த அதி   காரத்தை எந்த அளவுக்கு கீழான செயல்களுக்கு பயன்படுத்த முடியுமோ? அந்த அளவுக்கு பயன் படுத்தி சமூகத்தை தவறான பாதைக்கு வலி நடத்திச் செல்லும் கொடுமையை என்னவென்று சொல்வது?''காவல் துறையின் ஈரல் கேட்டு விட்டது ''என்று தமிழக முதல்வர் சொல்லும் அளவுக்கு அவர்களின் செயல் உள்ளது.அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால் சமூகத்தில் எத்தனை விதமான மனிதர்கள் பாதிக்கப்பட்டு அவர்களும் சமூகத்தை தண்டிக்கும் அளவுக்கு மாறி விடுகிறார்கள்.                                                                                                                       காவல் துறை மட்டுமல்ல உலக அரசியல் வாதியிலிருந்து உள்ளூர் ரௌடிகள் வரை தான் இருக்கும் நிலை மறந்து,தன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் போலி வேசமிட்டு,போலி அதிகாரத்தை வைத்துக் கொண்டு சமூகத்தை பால் படுத்தி வருகிறார்கள்.அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ரௌடிகள் மட்டுமல்ல நமது உலக நாட்டு அதிபர்களும்,பிரதமர்களும்,முதல்வருகளும் தலைவர்களும் தமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு தங்கள் கடைமையை சரி வர செய்யாமல் போனதால்தான் இன்று மக்கள் புரட்சி செய்து அவர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குடும்ப அமைப்பிலும் ''தான்'' தான் எல்லாம் என்ற அகங்காரம் தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன.                                                                                                                                                                       இப்படி ஒவ்வரு சூழ்நிலைக்கேற்ப மனிதன் தான் மேற்கொள்ளும் கடைமையை சரிவர செய்ய தடையாக இருக்கும் மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?                                                                                                                                       நண்பர்களை பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தைச் சொல்லவும்.நன்றி .

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பதிவி வரும் போது பனிவு வரவேண்டும் துணிவு வர வேண்டும் தோழா...
என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது...

என்ன செய்ய இது தான் ஜனநாயகம்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே..

பெயரில்லா சொன்னது…

அட பிரமாதம் போங்க. அசத்திடீங்க. உண்மைலேயே நல்லா இருக்கு.

மைதீன் சொன்னது…

என்னத்த சொல்ல....


ஜனநாயகம் அல்ல பணநாயகம்.