இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

திங்கள், 14 மார்ச், 2011

அமெரிக்க அரசு சிந்திக்குமா?

                                அன்பு என்பது என்ன ?சக மனிதர்களின் மீது,சக உயிர்களின் மீது செலுத்தப்படுவது.இவ்வாறு செலுத்தப்படும் அன்பை சக நாட்டின் மீது செலுத்த முடியாதா? சக நாட்டின் மீது அன்பை செலுத்தி அவர்களும் மனிதர்கள் தான் அவர்களும் இந்த பூமியில் வாழ உரிமை உள்ளது என்று நினைப்பதுதான் அறிவுடைய எத்தகைய மனிதர்களின் நிலையும். ஆனால் இந்த உலகை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா அத்தகைய நிலைப்பாட்டை கை கொண்டுள்ளதா?                                                                                                                                                               ஐயா,அமெரிக்க அரசாங்கமே நீங்கள் ஆதிக்கம் செலுத்தாத நாடு இப்பூமியில் எங்காவது உள்ளதா?நீங்கள் சுகமாக வாழவும்,உங்கள் தேவைக்கு எங்காவது,எந்த வழியிலாவது முட்டுக் கட்டை வந்தால்,அந்த இடத்தை உண்டு,இல்லை என நிர்முலமாக்கி அழித்தால் தான் உங்களுக்கு தூக்கமே வருகிறது. ஏன்இந்த கொலை வெறி?நீங்கள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறிர்கள்.உங்கள் நாட்டு குடி மகன் எப்படி மனிதர்களோ!அதைப்போலத்தான் சக நாட்டு மனிதர்களும்.ஒரு சாரர் மட்டும் நன்கு செழித்து வளர வேண்டும்,மற்றவர் எப்படி போனால் என்ன?என்ற உங்கள் மனப்போக்கை என்னவென்று சொல்வது?நீங்கள் ஆதிக்கம் செலுத்தி வளமாக வாழ்வதால்,உங்கள் மனப்போக்கையே இந்த உலகில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தனது மனப்போக்காக எடுத்துக் கொண்டுள்ளது.                                                                                                                                                                              நீங்கள் எப்படி சக நாட்டை அழிப்பதற்கு என்னவிதமான தந்திரங்களை கை கொள்கிரிர்களோ,அதே முறையை வைத்தே ஒவ்வரு நாட்டு மனிதர்களும் தனது குடும்பங்களை,தனது சொந்த பந்தங்களை,தனது நாட்டிளிலுள்ள பிற குடிமகன்களின் சொத்தையோ,அவனது வாரிசையோ அழிப்பதற்கு உங்களது அளவுகோலையேஉதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த உலகில் நீதி,நேர்மை,உண்மை போன்ற நல்நெறி கொள்கைகள் உண்டா?இதை கடைபிடிப்பவர் நன்றாக வாழ முடியும் என்றுதான் உங்கள் நாட்டு பெரியவர்கள் முதல் உலக நாட்டு பெரியவர்கள் வரை கற்ப்பித்து கொடுத்து சென்றுள்ளார்கள்.ஆனால் இந்த நன்னெறி கொள்கையை நீங்கள் கடைப் பிடிக்கிரிர்களா?என்பது உங்கள் மனசாட்சிக்குத்தான் வெளிச்சம்.நீங்கள் எடுக்கும் ஒவ்வரு தவறான முடிவும்,வருங்காலசந்ததினருக்கு தவறான வழிகாட்டுதலாக ஆகி விட வாய்ப்பு உள்ளது.உலகை தவறான போக்கில் வழி நடத்தி செல்கிரிர்கள்.                                                                  இதை அனைத்தும் தெரிந்தும்,நாங்கள் இந்த நன்நெறி கொள்கைக்கு எதிராகத்தான் செல்வோம் என்று நீங்கள் முடிவேடுத்தால்,காலம் உங்களை சீராட்டி மகிழும் என்று நினைக்காதிர்கள்.இந்த பூமிப் பந்தில் உங்கள் தேசமே இல்லாமல் போய் விடும்.இதற்க்கு யாருடைய ஒத்துழைப்பும் தேவை இல்லை,இயற்கை ஒன்றே போதும்.                                                                                                                                                                                                 நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை தெரிவிக்கவும்.நன்றி.                                                        

1 கருத்து:

மைதீன் சொன்னது…

அமெரிக்கர்கள் மட்டுமே மனிதர்கள்.மற்றவர்கள் கிள்ளுக் கீரைகள் என்ற மனோபாவம் அமெரிக்கவுக்கு எப்போதுமே உண்டு.அதை தட்டிக் கேட்பதற்கு விஜய் போல் ஹீரோ எப்போது வருவாரோ தெரியவில்லை.