இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

செவ்வாய், 8 மார்ச், 2011

நரேந்திர மோடி நீங்கள் கொன்றது எத்தனை பாடி?

                             ஒரு நாட்டின் நிர்வாகி என்பவர்,தலைவர் என்பவர்,தன நாட்டின் எந்த குடிமகனின் மதத்தையோ,ஜாதியையோ,ஏழை  பணக்காரன் என்ற வித்தியாசத்தையோ,உயர்வு,தாழ்வு என்ற பேதத்தையோ பார்க்காமல் அனைவரும் நமது மக்கள் என்று எண்ணுவதே அழகு.அதுவே தலைவனுக்குரிய பண்பு.                                                                                                                                                          ஐயா,  நரேந்திர மோடி உங்களுக்கு மனசாட்சி உண்டா?உங்கள் மனசாட்சி உங்களிடம் பேசுமா?உங்கள் மனசாட்சி போடும் ஓலத்தில் உங்களுக்கு தூக்கம் வருமா?                                                      கோத்ரா ரயில் சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது.யாரு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் அதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது.சம்பவம் நிகழ்ந்து விட்டது.அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல் உங்களுக்கு கிடைத்திருக்கும்.அப்பொழுது உங்கள் மனம் என்ன நினைத்தது,நியூட்டனின் விதியையா?''ஒவ்வரு வினைக்கும் எதிர் வினை உண்டு ''இப்படியா?உங்கள் மூளை சிந்தித்தது.ஆகா!என்னவிதமான அறிவியல் பார்வை.நீங்கள் குஜராத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்ற இந்த பார்வை உதவும்.குஜராத் மக்களிடம்  இந்த அறிவியல் பார்வையை போதித்திர்கள் என்றால் நீங்கள் போன இடம் புல் முளைத்திருக்கும்.ஆனால் மக்களிடம் மதவாதம் என்ற இல்லாத ஒன்றை சொல்லி அவர்கள் அறிவை கெடுத்து,ஜெயித்து இன்று முதல்வராக அமர்ந்து இருக்கிறிர்கள்.                                                                                                                                           தார்மீகரீதியில்  நீங்கள் முதல்வராக தொடர எந்த நியதியும் இல்லை என்று தெரிந்த போதிலும் ,நீங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறிர்கள்.காலம் உங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்குமா?நிச்சயம் கொடுக்கும்.உங்கள் மூளை இயங்கும் வரை,உங்கள் இதயம் துடிக்கும் வரை உங்கள் மனசாட்சி உங்களை அரித்துக்கொண்டே தான்  இருக்கும் இதுதான் உங்களுக்கு தண்டனை.நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?உங்கள் மனசாட்சிதான் உங்களை தூங்க விடுவதே இல்லையே?உயிர் இருந்தும் நீங்கள் செத்த மனிதர்.                                                                                                                                             நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.         

கருத்துகள் இல்லை: