இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

சனி, 12 மார்ச், 2011

இயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன?

                   காலையில் எழுகிறோம்,அலுவலகங்களுக்கோ,வியாபார நிறுவனங்களுக்கோ,வேறு எங்காவது பணி புரியவோ செல்கிறோம்.மாலை வருகிறது வீடு திரும்பிகிறோம்,உணவருந்திகிறோம்,தூங்குகிறோம்.இதுதான் நமது அன்றாட வாழ்கைமுறை.இதை மீறி,இந்த உலகம் என்பது என்ன?இந்த உலகம் ஏன்?நம்மை தண்டிக்கிறது  என்றுஎன்றாவது யோசித்து இருக்கிறோமா?                                                                                                                                                                பூமிக்கு அருகில் சந்திரன் நெருங்கி வரும் பொழுது எல்லாம் ஏதாவது இயற்கை அழிவை பூமிக்கு அன்பளிப்பாக சந்திரன் வழங்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.வரும் மார்ச் மாதம் 19 -தேதி பூமிக்கு  அருகில் சந்திரன் வருகிறது.இதன் முன்னேர்ப்பாடே இந்த ஜப்பானிய சுனாமி.இதற்கு முன்பும் பூமியை சந்திரன் நெருங்கி வந்த சமயங்களில் பல இயற்கை அழிவுகள் உண்டானது நிறுபிக்கப்பட்டுள்ளது.                                             இயற்கை நிகழ்வு இப்படி செல்ல,நாம் நமது வாழ்கை முறையில் யாரும் எப்படியும் போய்  செத்து தொலையட்டும் ,நாம் மட்டும் நன்கு வாழ [!]என்ன தந்திரம் செய்தாவது இந்த இயற்கையை சேதப்படுத்தியாவது வாழ்ந்து விட வேண்டும்,என்று திட்டமிடுகிறோம்.அன்றாடம் நாம் உபயோகிக்கும் ஏர்கண்டிசன்,குளிர்சாதனப்பெட்டி விடும் வாயுக்களால் காற்று வெளியில் ஓசான் மண்டலம் ஓட்டையாகி பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.ஒவ்வரு நாட்டு அணுக்கதிர் வீச்சு கழிவுகள்,மின்னணுக் கழிவுகள்,மருத்துவக் கழிவுகள்,கன உலோகமான கேட்நிய,பாதரசம் போன்ற தொழிற்சாலை கழிவுகள் முதலியவற்றை எப்படி அழிப்பது என்பது தெரியாமலே,ஒவ்வரு நாட்டு கடலிலும் யாருக்கும் தெரியாமல் கொட்டி வருகிறோம்.இதன் சமிபத்திய பாதிப்புதான் சோமாலியா நாட்டு மக்களின் நிலைமை.வளர்ந்த நாடுகள் எனச் சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய,அமெரிக்க நாட்டு அரசுகளின் சுயநலமான போக்கினால்,சோமாலிய நாட்டு மக்கள் சொல்ல முடியாத நோய்களிலும்,வாழவே முடியாத நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இதற்கு காரணம் அவர்கள் நாட்டு கடற்பகுதியில் அனைத்து மேலே சொன்ன கழிவுகளையும் கொட்டி அவர்கள் வாழ்வையே இன்று கேள்வி குறி ஆக்கி விட்டார்கள்.சோமாலிய நாட்டு கடற்பகுதியில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள மூன்றாம் நாட்டு கடற்பகுதியில் உள்ளும் இத்தகைய கழிவுகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொட்டி,அங்குள்ள மீன்வளம்,பிற  உயிர்கள் முதலியவற்றை அழிப்பதோடு கடல் மாதாவையும் நிலை குலைய வைக்கிறார்கள்.                                                  அட மனிதர்களே!இயற்கையை இப்படி நாசப்படுத்தியதால் தான்,நீங்களும் வாழ வேண்டாம் என்று இயற்கை நம்மை தண்டிக்கிறது.இதை நாம் உணருவோமா?இதை தீர்ப்பதற்கு என்ன வழி?என்று சிந்திப்போமா?                                                                                                                                       நண்பர்களே பதிவை படித்து கருத்தை தரவும்.நன்றி.                                  பின்குறிப்பு ;விரிவான விளக்கத்திற்கு ஜூலை 2009 உயிர்மை இதழின் சோமாலியா கட்டுரையை வாசிக்கவும்.                                   

கருத்துகள் இல்லை: