இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

திங்கள், 7 மார்ச், 2011

பெண்கள் போகப் பொருள்களா?

[  மகளிர் தினம்-சிறப்பு கட்டுரை ]  
                                         பெண் என்பவள் யார்?அவள் சக மனுசி.எப்படி ஆணுக்கு இதயம்,மூளை மற்றும் அனைத்து உறுப்புகளும் உள்ளதோ,அதைப்போல அனைத்து உறுப்புகளும் உள்ள மனுசிதான் அவள்.ஆனால் இந்த பெண்களை சில ஆண்களும்,ஆணாதிக்க நிறைந்த ஊடகத்துறையும் எப்படி கையாளுகின்றன?                                ஒரு மனிதனின் மனதை மயக்கக்கூடிய   மதுபானங்கள்,கஞ்சா போன்ற போதை வஸ்துவைப் போல பெண்களையும் ஒரு போகப் பொருளாக இந்த ஊடகங்கள் கையாளுகின்றன.                                                                                   பெண்களுக்கு சுய அறிவே கிடையாதா?சுய சிந்தனையே கிடையாதா?அவர்கள் ஆணைச் சார்ந்துதான் இயங்க வேண்டுமா?ஆண் சொல்வதை எல்லாம் கேட்டு தலையை ஆட்ட வேண்டுமா?இதை காலங் காலமாக மத நூல்களில் இருந்து நாம் போற்றி பாதுகாக்கும் திருக்குறள் வரை பெண்களை தாழ்வாகவே பேசி வருகின்றன.இதில் எது உண்மை.                                                                             ஒரு பெண்ணை பார்த்தால் வயது வந்த ஆண்களுக்கு மோகமோ,காமமோ வருவது இயல்பான இயற்கையான ஒரு நிகழ்வு.அடுத்த தலைமுறையை உருவாகக்கூடிய ஒரு உத்வேகம்.எதிர் எதிர் பாலினருக்கு ஏற்படக்கூடிய இயல்பான ஒரு ஈர்ப்பு.இதை ஆணும் சரி,பெண்ணும் சரி இயல்பாகவே உணர்வார்கள்.ஆனால் இந்த உணர்வை வைத்து ஊடகங்களும்,குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்கள் செய்யும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது.பெண்களை அணுகவே பட முடியாத ஒரு உயிரிய பொருளாகவும்,அவளை பார்த்து ஆண் எச்சில் வடிப்பதைப்போலவும் தவறாக சித்திகிரிக்கிரார்கள்.இதை எல்லாம் பார்த்து விட்டு இந்த இளைய சமுதாயம் பெண்களை எப்படி எதிர் கொள்ளும்?தமிழ் பட கதாநாயகன் பெண்களை எவ்வளவு மோசமாக கையால்கிறானோ அதற்கேற்றவாறு அவன் ஹீரோ?                                                 அட ஞான  சூனிய தமிழ் இயக்குனர்களே நீங்கள் சினிமாவில் காட்டும் பெண்களைப் போல்தான் உங்கள் வீட்டுப் பெண்களும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறிர்களா?தமிழ் பட கதாநாயகியை என்றாவது சுய சிந்தனையுள்ள பெண்ணாக காட்டியிருர்கிரிர்களா?  ஆனால் இதை எல்லாம் பார்த்துதான் தமிழ் பெண்கள் ,தமிழ் சினிமாவையே பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.உங்களுக்கு பெண்களின் உண்மைத்தன்மையை படம் எடுக்க தெரிந்தால் எடுங்கள்,இல்லை என்றால் நீங்கள் வயிறு வளப்பதற்கு எத்தனையோ வேலை உள்ளது.அதைச் செய்யுங்கள்.பெண் என்பவள் என்றைக்குமே ஆண்களின் சகவழி நண்பன் என்ற போக்கில் நீங்கள் எப்போது படம் எடுக்கிரிர்களோ!அன்று தான் தமிழ் சினிமா உருப்படும்.இதை தமிழ் பெண்கள் நன்கு உணர்வார்கள் .ஆனால் நீங்கள்?                         

                                                 பெண் நண்பிகளே பதிவை படித்து ஓட்டைப் போட்டு முக்கியமாக கருத்தை உங்கள் பார்வையில் விரிவாக தரவும்.நன்றி .   

4 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

மகளிர் தின வாழ்த்துக்கள்..
பெண்மையை போற்றுவோம்...

ASHIQ சொன்னது…

CLICK THE LINK TO READ

விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...


..

puthiyaulakam சொன்னது…

வாழ்த்துக்கள்
http://puthiyaulakam.com

Chitra சொன்னது…

தமிழ் பட கதாநாயகியை என்றாவது சுய சிந்தனையுள்ள பெண்ணாக காட்டியிருர்கிரிர்களா?


.....அப்படி வந்தால், படம் ஓடாதே என்று சொல்வாங்க.... எல்லாம் வியாபாரம் தான்! :-(