இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

ஞாயிறு, 6 மார்ச், 2011

சாரு நிவேதிதா மூடநம்பிக்கைவாதியா?

                                              உயிர்மை,ஆனந்த விகடன் போன்ற தமிழில் பிரபல பத்திரிக்கையில் எழுதி வருபவர் இவர்.இவர் தன்னை தமிழில் யாரும் மதிக்கவே இல்லை,ஆனால்மலையாளத்தில் என்னை கொண்டாடுகிறார்கள் என்று அடிக்கடி புலம்புவர்.இணையதளங்களிலும் சரி,பிரபல பத்திரிக்கையிலும் சரி என் பெயரே உச்சத்தில் உள்ளது.ஆனால் இந்த பாழாய்ப்போன தமிழ்ச் சமூகம் என்னை கண்டு கொள்வதே இல்லை என்று தாம் எழுதிய பத்திரிக்கையிலும்,இணையதளங்களிலும் தன் ஆதங்கத்தை தெரிவிப்பார்.                                                                                                                                                                                          ஒரு எழுத்தாளர் என்பவர் சமூகத்தில் உள்ள எந்த மக்களுக்கும் தவறான பாதையை காட்டக் கூடவே கூடாது.தனக்கு தெரியாத எந்த நபரையும் ஆகோ,ஓகோ வென புகழ கூடாது.ஆனால் இவர் சமிபத்தில் நித்தியானந்தா என்பவரின் உண்மை சீடனாகவே தன்னைக் காட்டிக்கொண்டு பத்திரிக்கையில் எழுதி வந்தார்.அவர் புகழ் பத்திரிக்கையில் நாறியவுடன் ''கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ''என்பதைப் போல தான் நிரபராதி என்றும்,அவர் உலக மகா'' செக்ஸ் பாம் ''என்பதைப் போலவும் எழுதி காசுப் பார்த்து விட்டார்.                                                            அது மட்டுமா செய்தார்?அவர்  தொகுத்த  சில கட்டுரையிலும் அசரத் [இஸ்லாமிய பிராடு ]   என்பவர் ஒருவர் இருக்கிறார்.அவர் மகாமேதை என்று சொல்வதுடன்,தனது வாசகி ஒருவரை குழந்தையோடு அமெரிக்காவில் இருந்து அழைத்து வந்து,வேனில் கூட்டிக்கொண்டு அந்த அசரத்தை சென்று பார்த்தாராம்.அதை பக்கம் பக்கம்மாக எழுதி காசு பார்த்து விட்டார்.                                                ஐயா,சாரு,நீங்கள் லத்தீன்அமெரிக்க இலக்கியங்களை படித்திருக்கலாம்,ஐரோபிய இலக்கியங்கலய்ப் படித்திருக்கலாம்,பா.சிங்காரத்தை பாராட்டலாம்,ஆதவனை ஆதரிக்கலாம்,இளையராஜாவை இம்சக்கிலாம் தப்பில்லை.ஆனால் மூட நம்பிக்கையை வளர்க்க கூடிய நிகழ்வுகளை தயவு செய்து தவிருங்கள்.                                                       இந்த உலகில் எந்த மனிதனுக்கும் [நபி,ஏசு,புத்தர் உள்பட ]மனித சக்தியை தவிர வேறு எந்த அபூர்வ சக்தியும் கிடையாது.இதை நீங்கள் உணர்ந்திர்களா?உணர வில்லையா?என்பது எங்களுக்கு தெரியாது?ஆனால் நீங்கள் தன்னையும் குழப்பி,உங்கள் வாசகரையும் குழப்புகிரிர்கள்.இப்படி நீங்கள் இருந்து கொண்டு தமிழில் என்னை எவரும் கொண்டாட மாட்டேன் என்கிறார்கள் ,என்கிறிர்கள்.இப்படி புலம்புவதை விட்டு விட்டு நல்ல இலக்கியம்  படைப்பதற்கு உங்கள் மூளையை செலுத்திவீர்களா?                                                                                      நண்பர்களே பதிவை படித்து சாருவுக்கு ஒரு ''ஓ''[ட்டு ] போடுங்கள்.நன்றி.                   

4 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

நறுக்குனு நாலு ஓட்டு போட்டாச்சு..

ஞாஞளஙலாழன் சொன்னது…

ஓட்டு போட்டாச்சு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

நித்தியானந்தா விவகாரத்தில்
சாருநிவேதிதா விகாரமாகிப்
போனார் என்பதை நறுக்குனு
சொன்னீங்க.

மைதீன் சொன்னது…

கேரளாவில் பில்லி சூனியம் மாந்த்ரீகத்தில் நம்பிக்கை அதிகம் ஒருவேளை அதற்காக இவர் எழுத்தை விரும்புகிறார்களோ என்னவோ?